Heavy rains echo: Holidays announced for schools in 18 districts!

Advertisment

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்துவருகிறது. இந்த நிலையில், தொடர் கனமழை காரணமாக, தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (03/11/2021) ஒருநாள் விடுமுறை அளித்து, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

அதன்படி, எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுப்பட்டுள்ளது என்பது குறித்து பார்ப்போம். திருச்சி, திருவாரூர், வேலூர், நாமக்கல், கடலூர், புதுக்கோட்டை, காஞ்சிபுரம், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பெரம்பலூர், நாகை, திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.