Advertisment

புயல் காலத்தைப் போல் சென்னையில் கொட்டும் மழை! (படங்கள்)

புயல் காலங்களில் மழை பெய்வதைப் போல், பருவமழையின் கடைசி காலகட்டத்தில் சென்னையில் தொடர் மழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நள்ளிரவு முதல் பெய்து வரும் தொடர் கனமழையால் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியது.

Advertisment

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். பிரதான சாலைகள், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.தொடர் கனமழை காரணமாக கிண்டி உள்ளிட்ட முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Advertisment

இதனிடையே, சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் மேலும் 3 மணி முதல் 6 மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும் என்றும்சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Chennai heavy rains
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe