கனமழை எச்சரிக்கை: பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

Heavy rain warning: School and colleges in various districts will be closed tomorrow!

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து, தமிழ்நாட்டில் நெல்லை, கன்னியாகுமரி, சேலம், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நாளை (18/11/2021) அதிகனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதிகனமழை எச்சரிக்கை காரணமாக இரண்டு நாட்களுக்கு தேவையான பொருட்களை இருப்பு வைத்துக் கொள்ள பொதுமக்களை பெருநகர சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

மேலும், பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (18/11/2021) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி, வடகிழக்கு பருவமழை காரணமாக நாளை (18/11/2021) கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

அதேபோல், திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் அனைத்து தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், காஞ்சிபுரம், நெல்லை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (18/11/2021) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

chennai rains colleges District Collectors Holidays schools
இதையும் படியுங்கள்
Subscribe