கடந்த ஒருவாரமாக உதகை மற்றும்நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக இந்த இரண்டு நாட்களில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisment

Heavy rain in Uthagai... TNBSC cancels exam!

இந்நிலையில் தமிழக முதல்வர் தற்போது வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்உயிரிழந்தோர் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிர்வாணம் அளிக்கப்படும் எனஅறிவித்துள்ளார்.

இந்நிலையில் நாளை உதகையில்நடைபெற இருந்த டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கான தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பிரிக்ஸ் பள்ளியில் நடைபெறவிருந்த தேர்வு மழையால் ரத்து செய்யப்படுவதாக நீலகிரி ஆட்சியர் அறிவித்துள்ளார். உதகை தவிர மற்ற மாவட்டங்களில்டிஎன்பிஎஸ்சி தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.