Advertisment

சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவில் பலத்த மழை!

சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவில் பலத்த மழை பெய்தது.

Advertisment

சென்னையில் நேற்று மாலைமுதல் அம்பத்தூர், வடபழனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. பின்னர் நள்ளிரவிலும் தொடர்ந்த மழை சூறைக்காற்றுடன் பெய்தது. விடிய விடிய மழை பெய்ததால் பல்வேறு இடங்களில் சாலையில் மழைநீர் தேங்கியது.

Advertisment

இதேபோல் சேலம் மாவட்டம் மேட்டூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மீண்டும் பலத்த மழை பெய்தது. இடி, மின்னல், பலத்த காற்றுடன் பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடியது.

இதேபோல், தருமபுரி, தஞ்சாவூர், ஈரோடு, புதுக்கோட்டை, கன்னியாகுமரி என தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

rain
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe