அரபிக்கடலில் நிலைகொண்டிருந்தமஹா புயல் விலகி செல்வதால் தமிழகத்திற்கு கனமழைக்கு வாய்ப்பில்லை என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மட்டும் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மற்றபடி சில நாட்களுக்கு தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும். நாளை மறுநாள் வடக்கு அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.