Heavy rain with strong winds in Cuddalore

தமிழகத்தில் சில நாட்களாகவே பரவலாக மிதமான மழை பெய்து வரும் நிலையில், அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Advertisment

அறிவிப்பின்படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், திருப்பத்தூர், சேலம், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கள்ளக்குறிச்சி, ஈரோடு, நாமக்கல், கடலூர், தென்காசி மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாகப்பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பொழிந்து வருகிறது. குறிப்பாககடலூரின் மஞ்சக்குப்பம், திருப்பாதிரிப்புலியூர், செம்மண்டலம், வண்ணாரபாளையம், வண்டிப்பாளையம் ஆகிய பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாகக் கனமழை பெய்து வருகிறது.

Advertisment