புதுக்கோட்டை: இரண்டு தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை!

தமிழகத்தில் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், ஒரு சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது தொடர்மழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆவுடையார் கோவில், மணமேல்குடி தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (02.12.2019) விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

heavy rain pudukkottai taluks schools holiday

ஏற்கனவே கடலூர், செங்கல்பட்டு, புதுவை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை காஞ்சிபுரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் திருவள்ளூர், தூத்துக்குடி, சென்னை ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள குந்தா, உதகை, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட நான்கு தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

ANNOUNCED collector holiday schools two taluks PUDUKKOTTAI DISTRICT Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe