Skip to main content

பாலாற்றின் கிளை ஆறுகளில் தண்ணீர்... மகிழ்ச்சி வெள்ளத்தில் விவசாயிகள்!

Published on 30/06/2020 | Edited on 30/06/2020

 

heavy rain palar river flood farmers happy

 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சுற்று வட்டாரப் பகுதிகளான ஜவ்வாது ராமசமுத்திரம், அலசந்தபுரம், திம்மாம்பேட்டை, அம்பலூர் உட்பட பல பகுதிகளில் ஜூன் 29- ஆம் தேதி அன்று நள்ளிரவு பலத்த மழை பெய்தது. பலத்த மழையால் ஜவ்வாது ராமசமுத்திரம் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்திருந்தது. மேலும் அலசந்தபுரம் பகுதியில் உள்ள மன்னாற்றில் வெள்ளம் ஏற்பட்டு பாலாற்றில் உள்ள அம்பலூர் வரை தண்ணீர் வந்தது. 

 

பாலாற்றில் மழைநீர் வெள்ளம் வருவதைக் கண்டு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் அப்பகுதி பொதுமக்கள் தண்ணீரை வரவேற்கும் விதமாக கற்பூரம் ஏற்றி மலர் தூவி வரவேற்றனர். இதனிடையே வருவாய்க் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணியம் மற்றும் வட்டாட்சியர் சிவபிரகாசம் ஆகியோர் அப்பகுதிக்கு நேரில் சென்று மழையால் சேதம் எதாவது ஏற்பட்டுள்ளதா? என ஆய்வு மேற்கொண்டனர்.

 

heavy rain palar river flood farmers happy

 

ஆற்றுப் பகுதிகளில் அளவுக்கு அதிகமாக மணல் கொள்ளை நடந்துள்ளதால், ஆறுகள் பள்ளமாகவும், ஏரிகள் மேடாகவும் உள்ளது. கால்வாய்கள் ஆக்கிரமிப்புகளால் மழை வெள்ளம் வந்தாலும் ஏரிகளுக்குச் சென்றடைவதில்லை. பருவமழை தொடங்குவதற்கு முன்பு நீர் நிலைகளைத் தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளனர். இரண்டு மாதங்களுக்கு முன்பு கோடை வெயிலின் தாக்கத்தால் பாலாற்று படுகையில் உள்ள ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் முற்றிலுமாக கருகின. மேலும் நிலத்தடி நீர்மட்டம் 1,000 அடியிலிருந்து 1,500 அடிக்குக் கீழ் சென்றது. 

 

இதனால் விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். நீண்ட தூரம் சென்று தண்ணீர் எடுத்து வரும் சூழல் ஏற்பட்டது. தண்ணீர் பற்றாக்குறை காரணமாக பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

அரசு மருத்துவமனையில் வீசும் துர்நாற்றம்; நோயாளிகள் குற்றச்சாட்டு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Bad smell wafting from Vaniyambadi Government Hospital

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெருமாள்பேட்டை பகுதியைச்  சேர்ந்தவர் சத்யா (30). கர்ப்பிணியான சத்யாவின் கரு கலைந்துள்ளது. இதனால் கடந்த வெள்ளிகிழமை அன்று மிகுந்த வயிற்று வலி ஏற்பட்டு உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் கருக்கலைப்பு ஏற்பட்டுள்ளதாகவும்  மேலும் மருத்துவமனையில்  சேர்ந்து வயிற்றை முழுவதுமாக சுத்தம் செய்ய வேண்டும் என கூறியுள்ளார்கள்.

இதனைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை சிகிச்சைக்காக உள்நோயாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.அதே வார்டில் சுமார் 7 நோயாளிகள் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் தினமும் காலையில் ஒரு ஊசியும் மாலையில் ஒரு ஊசியும் செலுத்தி விட்டு மாத்திரைகள் கொடுத்துவிட்டு செல்வதாகவும் நேற்று வரை வயிற்றை சுத்தம் செய்து உரிய சிகிச்சை அளிக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை வார்டில் கட்டில்கள் மேலிருக்கும் போர்வைகள் சரியாக சுத்தம்  செய்யப்படாமல் ரத்தக் கரையுடன் இருப்பதாகவும் தங்கியுள்ள அறையின் கழிவறையிலிருந்து அதிகப்படியான துர்நாற்றம் வீசுவதால்,  அறையில் உள்ள அனைவரும்  துர்நாற்றம் தாங்க முடியாமல் இரவு நேரத்தில் மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து உணவு உண்பதும்  உறங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நோயாளிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.