Skip to main content

நெல்லையில் கனமழை... கல்லூரி வாளாகத்தில் இடி விழுந்து மாணவி உயிரிழப்பு

Published on 10/05/2019 | Edited on 10/05/2019

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் மனோகல்லூரி வாளாகத்தில் இடி விழுந்து கட்டிடம் இடிந்து விழுந்து முதலாம் ஆண்டு மகாலெட்சுமி சம்பவ இடத்தில் பலி.

 

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. மேலும்  அக்னி நட்சத்திரம் துவங்கியதில் இருந்து அனல் காற்றுடன் கடும் வெப்பம் அதிகரித்தால் மக்கள் கடும் அவதி பட்ட நிலையில் வானிலை மையம் ஒரு சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என அறிவித்திருந்தது.

 

 Heavy rain at the nellai...

 

இந்நிலையில் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை முதல் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனை தொடர்ந்து சுமார் அரை மணி நேரமாக இடி மின்னல் லுடன் கனமழை பெய்தது. இந்த மழையில் சங்கரன்கோவில் திருவேங்கம் செல்லும் சாலையில் உள்ள நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் உறுப்பு கல்லூரியான மனோ கல்லூரி வாளாகத்தில் உள்ள கட்டிடத்தில் இடி விழுந்ததில் கட்டிடம் இடிந்து நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பெருங்கோட்டூர் ஆலங்குளம் பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகள் மகாலெட்சுமி (19) பி.ஏ. ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து வரும், மாணவியின் தலையின் மீது விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

 Heavy rain at the nellai...

 

 

 

 Heavy rain at the nellai...

 

இச்சம்பவம் பற்றி தகவலறிந்த தீ யணைப்பு துறையினர், மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்க்கு வந்து பலியான மாணவியின் உடல்லை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இச்சம்பவத்தால் கல்லூரி மாணவ, மாணவிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சி.ஏ.ஏவை எதிர்த்து சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் (படங்கள்)

Published on 12/03/2024 | Edited on 12/03/2024

 

மத்திய அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சி.ஏ.ஏ) எதிர்த்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். மேலும், அவர்கள் சி.ஏ.ஏ விளம்பர பதாகைகளைத் தீ வைத்து எரித்தனர்.

Next Story

படியில் தொங்கியபடி பயணம்; கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
Travel hanging on a step; 3 college students were loss their live

பேருந்தில் பயணிக்கும் சில பள்ளி, கல்லூரி மாணவர்கள் அபாயகரமாக படிக்கட்டுகளில் தொங்கியபடி செல்லும் வீடியோ காட்சிகள் அண்மையாகவே சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் பேருந்தில் படியில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் விபத்தில் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே திருநாவலூரில் தனியார் பேருந்தின் படியில் கல்லூரி மாணவர்கள் தொங்கிக் கொண்டு பயணித்ததாகக் கூறப்படுகிறது. பேருந்து திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது பின் தொடர்ந்து வந்த கண்டெய்னர் லாரி உரசியதில் படியில் தொங்கியபடி பயணித்த மூன்று பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவர்கள் காமேஷ், மோனிஷ், தனுஷ் ஆகிய மூன்று இளைஞர்களின் உடல்களும் பிரேப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் போலீசார் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.