தமிழகத்தில் தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், நெல்லை, விருதுநகர், ராமநாதபுரம், கடலூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்கிறது.

Advertisment

இந்நிலையில் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (03.12.2019) விடுமுறை என்று ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். அதன்படி அரியலூர், திருவாரூர், பெரம்பலூர், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை,தூத்துக்குடிஉள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மழை காரணமாக கடலூர், சிதம்பரம், வடலூர் கல்வி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் பள்ளிகள் தொடர்ந்து செயல்படும் எனவும் ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Advertisment

heavy rain most of districts schools holiday announced

அதிகபட்சமாக ராமநாதபுரத்தில் 9 செ.மீ, ராமேஸ்வரம், வட்டானத்தில் தலா 8 செ.மீ, தேவிபட்டினத்தில் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது.தென்காசி மாவட்டத்தில் தொடர்மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.