Heavy rain is likely in 8 districts of Tamil Nadu today

Advertisment

தமிழகத்தில் உள்ள 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகச்சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கும் நிலையில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள 8 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, விருதுநகர், சிவகங்கை ஆகிய 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.