Advertisment

கனமழை எதிரொலி; 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

Heavy rain echoes; Holidays for schools in 2 districts

Advertisment

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

கேரள கடலோரப்பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் இதன் காரணமாக இன்று முதல் டிசம்பர் 2 ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், கனமழை காரணமாக மாணவர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

கனமழை காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி அறிவித்துள்ளார். அதேபோல், தேனி மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் முரளீதரன் அறிவித்துள்ளார்.

rain monsoon
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe