கனமழை எதிரொலி; பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

Heavy rain echo; Holidays tomorrow for schools and colleges in various districts!

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து, தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்த நிலையில், தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (12/11/2021) விடுமுறை அளித்து, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

அதேபோல், ராணிப்பேட்டை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் அனைத்து தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (12/11/2021) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Holidays schools
இதையும் படியுங்கள்
Subscribe