Skip to main content

ஏரி கரை உடைந்தது... பயிர்கள் நீரில் மூழ்கின! 

Published on 31/10/2019 | Edited on 31/10/2019

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மாத்தூர் கிராம ஊராட்சிக்குட்பட்ட சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் அருணாச்சல பிள்ளை பாசன ஏரி அமைந்துள்ளது. இவ்வேரியின் நீர் பாசனம் மூலம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சுமார் 500 ஏக்கரில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக போதிய பருவ மழை இல்லாததால், ஏரியில் தண்ணீர் நிரம்பவில்லை. ஆனால் தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையால் அருணாச்சலம் பிள்ளை ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது.


ஏரியில் தண்ணீர் பிடிப்பு அதிகமானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்த நிலையில், ஏரியின் கரைகள் போதிய வலுவில்லாமல் இருந்ததினால் கரையில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும் காட்டாற்று வெள்ளம் போல் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால், அருகிலுள்ள 250 ஏக்கர் பரப்பளவில் பயிர் செய்யப்பட்டு இருந்த உளுந்து, கம்பு, நெல், கரும்பு உள்ளிட்டவைகள் வெள்ளத்தில் மூழ்குவதும், அடித்து செல்லப்படுவதுமாக உள்ளது.  
 

HEAVY RAIN CUDDALORE LAKE BREAKE DOWN WATER FLOOD AGRICULTURE LAND


இதனால் வயல் வெளிகள் தண்ணீரில் மூழ்குவதை கண்ட அப்பகுதி விவசாயிகள் தங்களின் முயற்சியில் அருணாச்சலம் பிள்ளை ஏரியில் ஏற்பட்ட உடைப்பை தென்னை மரங்கள் கொண்டும், மண் மூட்டைகள் கொண்டும் கரை கட்டும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் தகவல் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படாததால் சுமார் 20- க்கும் மேற்பட்ட விவசாயிகள் கழுத்து அளவு தண்ணீரில் நின்று கொண்டும், முட்புதர்கள், விஷ பூச்சிகள் உள்ளிட்டவைகளுக்கு அஞ்சாமல் தங்களின் நிலங்களை பாதுகாக்கவும், நீர் ஆதாரம் கொண்ட ஏரியின் தண்ணீரை வெளியே செல்லாமல் இருக்க தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். 
 

பலமுறை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறியும், ஏரியை தூர் வாராமலும், கரையை பலப்படுத்தாமலும் இருப்பது மிகுந்த வேதனையளிப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். ஏரியில் உள்ள மரங்களை ஏலம் விடுவதற்கு முனைப்பு காட்டும் ஊராட்சி நிர்வாகம்,  தங்களின் வாழ்வாதாரத்தை காக்கும் ஏரியை தூர்வாரமல், கரையை பலப்படுத்தாமல் இருப்பதால், அனைத்து விளைச்சலும் முழுவதும் அழிந்து விட்டதாக இப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர். அருணாச்சல பிள்ளை ஏரி நிரம்பி உள்ள தண்ணீரை கட்டுப்படுத்தி, தங்களின் விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் தற்போது போராடி வரும் நிலையில், விவசாயிகளை பாதுகாக்க அரசு போர்கால அடிப்படையில் துரிதமாக செயல்பட்டு வீணாக செல்லும் தண்ணீரை கட்டுப்படுத்தி, கரை அமைத்து விவசாயிகளை பாதுகாத்திட வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம்;நடந்தது என்ன? - காவல்துறை விளக்கம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
womanincident What happened Police explanation

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்துள்ள பக்ரிமாணியம் கிராமத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் குறிப்பிட்ட ஒரு சின்னத்திற்கு வாக்களித்ததாக ஒரு பெண் வெளியில் கூறியதாகவும், இதனைக் கேட்ட அதே ஊரைச் சேர்ந்த சிலர் அப்பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அதோடு இவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து அந்த பெண்ணை பலமாக தாக்கியதாகவும் கூறப்பட்டது. இதில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாகவும் கூறப்பட்டது. இது குறித்து உடனடியாக ஸ்ரீமுஷ்ணம் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், இந்த கொலை சம்பவம் குறித்து தீவிர விசாரணையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “கடந்த 19.04.2024 அன்று மாலை சுமார் 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பக்கிரிமணியம் கிராமத்தில் உள்ள ஆலமரம் முன்பு இரு தரப்பினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. ஒருபுறம் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் (அனைவரும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்) மற்றொரு பக்கம் ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் (அனைவரும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்). ஜெயசங்கரின் மகள் ஜெயப்பிரியாவை கிண்டல் செய்ததற்காகவும். ஜெயக்குமாரை தாக்கியதாக அவர் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுமாறு கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காகவும் தன்னெழுச்சியாக வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த தகராறில், இரு தரப்பினரும் ஆயுதம் ஏந்தாமல் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ள, கோமதி (ஜெயக்குமாரின் மனைவி) தலையிட்டு பிரச்னையை தடுக்க முயலும் போது. கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு (PHC)  அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக, ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்தில் Cr.No. 96/2024 U/s 147, 148, 294 (b), 323, 324, 506(ii), 302 IPC r/w 4 of TN பெண்கள் துன்புறுத்தல் தடைச் சட்டம் வழக்கு 20.04.2024 அன்று 01.00 மணிக்கு பதிவு செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட மொத்தம் 10 பேரில், ஐந்து பேர், 1. கலைமணி 2. தீபா (கலைமணியின் மனைவி) 3. ரவி 4. மேகநாதன் மற்றும் 5. அறிவுமணி ஆகியோர் கைது செய்யப்பட்டு 20.04.2024 அன்று நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். 

woman incident What happened Police explanation

இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், மேற்கண்ட சம்பவம் இரு தரப்பினருக்கும் இடையே இருந்த முன்விரோதம் காரணமாக நடந்துள்ளது என்பதும், சமூகவலைத்தளங்களில் பரவிய ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக வாக்களித்ததால் தாக்கியதாக குறிப்பிட்டுள்ளது முற்றிலும் தவறான கூற்றாகும். மேலும் இந்த சம்பவம் தொடர்பான காணொளி முற்றிலும் பொய்யானது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

26 மணி நேரம் விமான பயணம்; கடல் கடந்து வந்து ஜனநாயகக் கடமையாற்றிய மருத்துவர்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
doctor who came to Cuddalore from New Zealand and voted

கடலூர் செம்மண்டலத்தை சேர்ந்தவர் வினோத்( 46).  மருத்துவர். இவர் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நியூசிலாந்தில் வசித்து வருகிறார். அங்கு அவர் கடந்த 10 ஆண்டுகளாக ஒரு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.  இந்த நிலையில் கடலூர் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதும், அவர் தனது ஒற்றை வாக்கை செலுத்த சொந்த ஊருக்கு வந்து வாக்களிக்க விரும்பினார்.

இதையடுத்து அவர் நியூசிலாந்தில் இருந்து சொந்த ஊருக்கு வந்து செல்ல சுமார் ரூ.1.70 லட்சம் செலவு செய்து டிக்கெட் வாங்கினார். பின்னர் அவர் ஓட்டு போட விமானத்தில் 26 மணி நேரம் பயணம் செய்து சொந்த ஊருக்கு( கடலூர்,செம்மண்டலத்துக்கு) 18 ஆம் தேதி இரவு வந்தார்.  நேற்று மதியம் 12 மணிக்கு கடலூர் செம்மண்டலத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று தனது வாக்கைப் பதிவு செய்தார்.

பின்னர் இதுகுறித்து மருத்துவர் வினோத் கூறுகையில், வெளிநாட்டில், தமிழ்நாட்டை சேர்ந்த பலர் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் பல்வேறு காரணங்களுக்காக சொந்த ஊர்களுக்கு சென்று தங்களது வாக்கை செலுத்தி ஜனநாயக கடமையாற்ற முடியாமல் சிரமப்படுகின்றனர். அதனால் வெளிநாட்டில் வசிக்கும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தபால் வாக்கு அளிக்க அரசு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்றார்.