Advertisment

காரைக்காலில் தொடர்ந்து கனமழை- 4 மாவட்டங்களுக்கு நாளை கனமழை எச்சரிக்கை!

Heavy rain continues in Karaikal!

புரெவிபுயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தற்பொழுது காரைக்காலில் கனமழை பெய்து வருகிறது.

Advertisment

காரைக்காலில் புயல் காரணமாக சில நாட்களாகவே கனமழை பொழிந்துவரும்நிலையில்இன்றும்தற்பொழுது தொடர்ந்து திருநள்ளாறு, கோட்டுச்சேரி, திருப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பொழிந்து வருகிறது. அதேபோல் காரைக்காலில் அனைத்து ஆறுகளிலும் கரையை கண்காணிக்க பொதுப்பணித்துறைக்கு புதுச்சேரி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Advertisment

அதேபோல் மன்னார் வளைகுடா அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி அதே இடத்தில் நீடிப்பதால் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை,விருதுநகர் ஆகிய 4 மாவட்டங்களில் நாளையும்கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

weather heavy rain Karaikal
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe