Advertisment

வரப்போகும் கனமழை-வானிலை ஆய்வு மையம் தகவல்

'Heavy rain to come' - Meteorological Center Information

Advertisment

இன்று முதல் ஜனவரி 21 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஜனவரி 18-ல் ஆறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுகை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஜனவரி 18ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 19ஆம் தேதி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி ஆகிய 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 21 ஆம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 22-ல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னையைப் பொறுத்தவரை ஒரு சில பகுதிகளில் இன்று லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், நாளை அதிகபட்சமாக 30 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamilnadu weather
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe