சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல இடங்களில் பரவலாக மழை பொழிந்து வருகிறது. சென்னையில் அம்பத்தூர், பாடி, கொரட்டூர், கள்ளிக்குப்பம், மதுரவாயல், போரூர் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பொழிந்து வருகிறது. ஆவடி, பூந்தமல்லி, திருவேற்காடு, வானகரம், ஐயப்ப தாங்கள், செம்பரம்பாக்கம், அதே போல் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மழை பொழிந்து வருகிறது.