Skip to main content

ஏழு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!!

Published on 23/11/2018 | Edited on 23/11/2018

 

Alert

 

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. இன்னும் இரண்டு நாட்களுக்கு தமிழகத்திற்கு மழை வாய்ப்பு இருக்கும் என எதிர்பாக்கப்பட்ட நிலையில் தற்போது செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், 7 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளார்.

 

நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர் என இந்த ஏழு மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாவும், சென்னையை பொறுத்தவரை ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்