தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.
இந்நிலையில் சென்னையின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. கோயம்பேடு, வேளச்சேரி, ஆலந்தூர், ஈக்காட்டுதாங்கல், தியாகராயநகர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியது.
சென்னை மட்டுமின்றி வடகிழக்கு பருவமழை அறிகுறியாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பொழிந்தது. விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, நீலகிரி மாவட்டங்களிலும் பரவலாக மழை பொழிந்தது.