Advertisment

அடுத்த மூன்று மணி நேரத்தில் 30 மாவட்டங்களில் கனமழை

 Heavy rain in 30 districts in next three hours

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை துவங்கிக் கடந்த சில நாட்களாகப் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் சில நாட்களாகவே இரவு நேரங்களில் இடைவிடாது மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் சென்னையின் பல்வேறு இடங்களில் குளம் போல மழை நீர் தேங்கும் சூழல் ஏற்பட்டது. சென்னையின் பல பகுதிகளில் மாநகராட்சி ஊழியர்கள் மோட்டார் வைத்து மழை நீரை அகற்றி வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் தமிழகத்தின் 30 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில்கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை, விழுப்புரம், கடலூர், தஞ்சை, நாகை, திருவாரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, தேனி, கன்னியாகுமரி ஆகிய 30 மாவட்டங்களில் இன்னும் மூன்று மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Advertisment

Tamilnadu rain weather
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe