கொட்டித் தீர்த்த கனமழை; பாலாற்றில் வெள்ளம்

Heavy downpour; Flooding in Balaru

திருப்பத்தூர் மாவட்டம் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் பல மாவட்டங்களில் சில நாட்களாகவே பரவலாக மழை பொழிந்து வரும் நிலையில், நேற்று இரவு தமிழகத்தின் சென்னை, வேலூர் உள்ளிட்ட பல இடங்களில் மழை கொட்டி தீர்த்தது. இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வாணியம்பாடி மற்றும் தமிழ்நாடு ஆந்திரா வனப்பகுதிகளில் ஐந்து நாட்களுக்கு மேல் இரவு நேரங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக திம்மம்பேட்டை, ஆவாரங்குப்பம், ராமநாயக்கன் பேட்டை, அம்பலூர், கொடையாஞ்சி உள்ளிட்ட ஊர்களில் வழியாக செல்லும் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

flood thiruppathur vaniyambadi weather
இதையும் படியுங்கள்
Subscribe