Skip to main content

நகர் மன்ற கூட்டத்தில் அ.தி.மு.க - தி.மு.க உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம்!

Published on 29/07/2022 | Edited on 29/07/2022

 

Heavy argument between ADMK and DMK members in the city council meeting!

 

விருத்தாசலம் நகராட்சியின் நகர்மன்ற உறுப்பினர்கள் அவசரக் கூட்டம் நகரமன்ற தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸ் தலைமையில்,   நடந்தது. துணைத் தலைவர் ராணி தண்டபாணி முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையாளர் சேகர் வரவேற்றார்.

 

கூட்டத்தில் மன்ற பொருள்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்களை வாசித்த போது நகர்மன்ற உறுப்பினர் சந்திரகுமார் (அ.தி.மு.க) மன்ற பொருட்களில் உள்ள குறைகளை சுட்டிக் காட்டினார். அப்போது நகர்மன்ற ஆணையாளர் அடுத்து வரும் கூட்டங்களில் குறைகள் சரி செய்யப்படும் எனத் தெரிவித்தார்.

 

பக்கிரிசாமி (தி.மு.க) பேசுகையில், "இறைச்சி கழிவுகள் புறவழிச் சாலையில் கொட்டப்படுவதைத் தடுக்க வேண்டும்" எனவும், அன்பழகன் (திமுக) பேசுகையில், "பெரியார் நகர் பகுதியில் நவீன சுடுகாடு அமைத்து தர வேண்டும். செப்டிக் டேங்க் கழிவுகளை கழிவுநீர் கால்வாய்களிலும், திறந்த வெளியிலும் திறந்து விடுவதை தடுக்க வேண்டும்" எனவும், முத்துக்குமரன் (தி.மு.க) பேசும்போது," நகரப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் தங்கு தடையின்றி நடக்க ஏதுவாக மாரி ஓடையை உடனடியாக தூர்வாரி தடுப்பணை அமைக்க வேண்டும், வெளியூர்களில் இருந்து வரும் பயணிகள் ரயில் நிலையத்திற்கு வழி தெரியாமல் தவிப்பதை போக்க ஜங்ஷன் சாலையில் ரயில் நிலையம் அறிவிப்பு பதாகை வைக்க வேண்டும்" எனவும், த.வா.க உறுப்பினர் பி.ஜி.சேகர் பேசும்போது, "விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையின் நிலைமை மிகவும் அவலமாக உள்ளது. போதுமான மருத்துவர்கள்,  செவிலியர்கள் இல்லாததால் நோயாளிகளை வலுக்கட்டாயமாக வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்புகிறார்கள். எனவே போதுமான மருத்துவர்கள், பணியாளர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனறார்.

 

ராஜேந்திரன் (அ.தி.மு.க) பேசும்போது, "விருதாச்சலத்தில் உள்ள ஹோட்டல்களில் முன்புறம் அடுப்பு உள்ளதால் உணவு சமைக்கும்போது மிளகாய் பொடி உள்ளிட்ட காரப் பொடிகள் காற்றில் பறந்து வாகன ஓட்டிகளின் கண்களில் எரிச்சலை உண்டாக்குவதால் விபத்துக்கள் நடைபெறுகின்றன. அதனால் உணவகங்களின் பின்புறத்தில் அடுப்புகளை வைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனவும் கோரினர். இவற்றுக்கு பதிலளித்து பேசிய நகர்மன்றத் தலைவர் சங்கவி முருகதாஸ், " உறுப்பினர்களின் அனைத்து கோரிக்கைகளுக்கும் விரைவில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.

 

சிங்காரவேல் (பா.ம.க) பேசும்போது, "குப்பை கழிவுகள் எங்கே கொட்டப்படுகிறது என தெரியவில்லை. வீதிகளில் ஆங்காங்கே கொட்டி எரிக்கப்படுகிறது. மணிமுத்தாற்றில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. மணிமுத்தாற்றங்கரையில் உள்ள படிக்கட்டுகள் சரிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. அதனை உடனடியாக சீரமைக்க வேண்டும். விருத்தாசலத்தில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். தெப்பக்குளத்தை சீரமைத்து படகு குழாம் அமைக்க வேண்டும்" என்றார். அதற்கு ஆணையாளர், " குப்பை கழிவுகள் திடக்கழிவு திட்டத்தின் கீழ் மக்கும் மற்றும் மக்காத குப்பை என பிரித்து வீடு வீடாக சென்று சேகரிக்கப்பட்டு மக்கும் குப்பைகளை உரம் தயாரிக்கும் கூடத்திற்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. மீறி குப்பைகளை எரித்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

 

தொடர்ந்து சுயேட்சை உறுப்பினர் கருணாநிதி பேசும்போது, " பேருந்து நிலையத்தில் உள்ள தள்ளுவண்டி கடைகளுக்கு ஒரு குறிப்பிட்ட இடத்தை ஒதுக்கி சிறு வாடகை வசூலித்து அவர்களுடைய வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்" என பேசும்போது, அது சம்பந்தமாக விவாதம் நடந்து கொண்டிருந்த போது, திடீரென அ.தி.மு.க உறுப்பினர் ராஜேந்திரன் - தி.மு.க உறுப்பினர் பாண்டியன்  இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அ.தி.மு.க உறுப்பினர் சந்திரகுமார், ராஜேந்திரன் ஆகியோர், தி.மு.க உறுப்பினர் பாண்டியனிடம் ஒருமையில் பேசியதாக கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அ.தி.மு.க உறுப்பினர்கள், பா.ம.க உறுப்பினர் சிங்காரவேல் ஆகியோர், " தி.மு.க ஆட்சியில் நகர்மன்ற கூட்டத்தில் பாதுகாப்பு கிடையாது. அடுத்த முறை போலீஸ் பாதுகாப்புடன் தான் கூட்டத்தை நடத்த வேண்டும்" என்றனர். உடன் நகர் மன்ற தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸிடம், தி.மு.க உறுப்பினர் ஒருமையில் பேசுவதாக முறையிட்டனர். அதற்கு டாக்டர் சங்கவி முருகதாஸ், " இனிமேல் இதுபோன்ற நடக்காது" என உறுதியளித்தார். அதைத் தொடர்ந்து அ.தி.மு.க உறுப்பினர்கள் கூட்டத்தை விட்டு வெளியேற, தீர்மானம் நிறைவேற்றப்படுவதாக கூறி நகர் மன்ற தலைவர் சங்கவி முருகதாஸ் கூட்டத்தை முடித்து வைத்தார்.

 

திடீரென ஒருமையில் பேசியதாக கூறி அ.தி.மு.க, தி.மு.க உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பை ஏற்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.