ADVERTISEMENT

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனையில் குறைந்த செலவில் இருதய சிகிச்சை திட்டம்! 

04:34 PM Oct 01, 2020 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில் உலக இருதய தினத்தை முன்னிட்டு இருதயப் பரிசோதனை செய்துகொள்ளும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரூ.99 செலவில் இருதயப் பரிசோதனை செய்துகொள்ளும் திட்டம் தங்கள் மருத்துவமனையில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளதாக ஆதிபராசக்தி குழுமத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் இந்நிகழ்ச்சிக்கு மருத்துவமனை இயக்குநர் ரமேஷ் தலைமை தாங்கினார். இதில் முதன்மை தலைவர் சேகர், இருதய சிகிச்சை நிபுணர் பத்ரி நாரயணன், ஹரிஹரன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் 100க்கும் மேலான பயனாளிகள் பயனடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT