Skip to main content

அனைத்து பள்ளி கல்லூரிகளிலும் சுகாதாரமான கழிவறைகள் அமைக்க வேண்டும்- மாணவர் பெருமன்றம் தீர்மானம்

Published on 27/08/2018 | Edited on 27/08/2018
as

 

புதுக்கோட்டையில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் 5 வது  மாவட்ட மாநாடு தோழர்கள் மனோ, ரேவதி, உதயகுமார் தலைமையில் கொடியேற் றத்துடன் தொடங்கியது மாணவர் பெருமன்றத்தின் மாநில துணைச் செயலாளர் தோழர் அருள்ராஜ்துரை கொடி ஏற்றி துவக்க உரையாற்றினார்.

 யார் கையில் இந்தியா என்ற தலைப்பில் குரல் நெறி நாவலர் பெரியவர்  தங்கவேலனார் உரையாற்றினார். ஊலக பொதுமறையான திருக்குரல் மட்டும் தான் அனைத்தையும் அலசி ஆராய்ந்து சொல்கிறது. குரல் நெறி நடந்தால் குற்றங்கள் நடக்காது. மனிதம் காக்கப்படும். சுமதர்மம் காக்கப்படும். மனிதர்களிடையே ஏற்றத் தாழ்வுகள் இல்லாத உலகத்தை உருவாக்க முடியும். அதனால் தான் என் தேனீர் கடை முன்பு தினமும் ஒரு திருக்குரல் எழுதி வைக்கிறேன். திருவள்ளுவர் தினத்தில் அனைவருக்கு ரூ. 1 க்கு தேனீர் வழங்கி வருகிறேன் என்றார்.   மேலும் இம்மாநாட்டில் அனைத்து அரசுபள்ளி கல்லூரிகளிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சுகாதாரமான கழிப்பறைகள் அமைக்க வேண்டும். அனைத்து அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் பெண்களுக்கான நாப்தலீன் எரிப்பு இயந்திரம் அமைக்கவேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு பொறியியல் கல்லூரி அமைக்க வேண்டும். 

 

தமிழக அரசு மாணவர்களின் கல்வி கடனை முழமையாக ரத்து செய்ய வேண்டும். எஸ்.சி,எஸ்.டி மாணவர்களுக்கு முழுமையாக கல்வி உதவித்தொகையை ரத்து செய்ததை திரும்ப பெற்று கல்வி உதவிதொகை பெறாமால் நிலுவையில் உள்ள மாவணர்களுக்கும் உடனடியாக வழங்க வேண்டும். அனைத்து அரசு பள்ளி கல்லூரிகளிலும் காலியாக உள்ள ஆசிரியர் பணியடங்களை உடனே நிரப்ப வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இம்மாநாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
                

 

சார்ந்த செய்திகள்

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.