ADVERTISEMENT

“தடுப்பூசி போடுவதால் எந்த பின்விளைவும் இல்லை..” - ராதாகிருஷ்ணன் 

12:57 PM Jan 15, 2021 | tarivazhagan

ADVERTISEMENT


தமிழகத்தில் நாளை முதல் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய கரோனா தடுப்பூசிகள் போடப்படவிருக்கிறது. தமிழகத்தில் மட்டும் 166 இடங்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “தடுப்பூசியை விஞ்ஞான ரீதியாக அணுக வேண்டும்; தடுப்பூசி போடுவதால் எந்த பின்விளைவும் இல்லை. தமிழகத்தில் கரோனா தடுப்பூசி போடும் பணியை முதல்வர் பழனிசாமி நாளை தொடங்கிவைக்கிறார். தடுப்பூசிகள் அனைத்து மாவட்டத்திற்கும் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT