Skip to main content

சிதம்பரம் மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வு!

Published on 05/09/2020 | Edited on 05/09/2020

 

Health Minister inspects Chidambaram Hospital


 
சிதம்பரம் அரசு மருத்துவமனையில் உள்ள அவசரசிகிச்சை, ரத்தவங்கி, பொதுவார்டு, ரத்தப் பரிசோதனை மையம் உள்ளிட்ட அனைத்து இடங்களையும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார். இதன்பிறகு, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தங்கியுள்ள வார்டுக்கு சென்று அவர்களிடத்தில் நலம் விசாரித்தார். அப்போது கரோனா வார்டில் இருந்த பெண் ஒருவர் நல்ல சிகிச்சை அளிக்கப்படுவதாக அமைச்சருக்கு நன்றி கூறினார்.


பின்னர் மருத்துவமனைக்கு, சிகிச்சை பெற்றுகொள்ளவந்த கர்ப்பிணி பெண்களிடம் கர்ப காலத்தில் அரசு வழங்கும் பணம் மற்றும் சத்தான உணவுகள் வழங்கப்படுகிறதா? என்று கேட்டார். அப்போது நல்லூர் பகுதியில் இருந்து வந்த கர்ப்பிணி விஜயலட்சுமி கர்ப காலாத்தில் அரசு கொடுக்கும் எந்தச் சத்தான உணவும் வழங்கவில்லை என்று கூறினார். இதனைத் தொடர்ந்து அவர் கூறும் தகவலை விசாரணை செய்ய உத்திரவிட்டார்.

 
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கரோனா தொற்றுக்கு சிறப்பான சிகிச்சையை சிதம்பரம் அரசு மருத்துவமனை செய்துள்ளது. அதே நேரத்தில் கரோனா தொற்று ஆரம்ப காலத்தில் தனியார் மருத்துவமனைகள் இல்லாதநேரத்தில் இருந்து தற்போது வரை தொற்று பாதித்த 400க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு சிறப்பான சிகிச்சை அளித்து அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவர்களின் அர்ப்பணிப்பு பணியைப் பாராட்டுகிறேன்.” என்றார்.

 

சிதம்பரம் பகுதியில் கரோனா தொற்றால் உயிர் இழந்தவர்களை எரிப்பதற்கு ரூ 9 ஆயிரம் வசூல் செய்வதாக நாம் கேள்வி எழுப்பினோம். அதற்கு அமைச்சர் அனைத்து செய்தியாளர்களிடமும் கேமராக்களை ஆஃப்செய்ய கூறிவிட்டு சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலனை அழைத்து அரசு செலவில் இறுதிச் சடங்கு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். அதற்கு அவரும் நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார்.

 

Ad


அதேபோல் தமிழக முழுவதும் அரசு மருத்துவமனைகளில் உயிரைப் பணயம் வைத்து ஒரு நாளைக்கு ரூ, 200 கூலிக்காக தொற்று காலத்தில் கரோனா வார்டில் ஏற்படும் கழிவுகளைச் சுத்தம் செய்யும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் மருத்துவமனை காவலர்கள் உள்ளிட்டவர்களுக்கு கூலியை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு இன்சன்டிவ்தான் ரூ.200 கொடுக்கிறோம், தினக்கூலி எவ்வளவு கொடுக்கிறோம் என்று கூறாமல் மழுப்பாலான பதிலைக் கூறி கிளம்பிவிட்டார்.  

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

நீதிமன்றத்தில் புதிய மனு; விஜயபாஸ்கரின் பிடியை இறுக்கும் அமலாக்கத்துறை

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
ed Petition seeking details of case registered against Vijayabaskar by Anti-Corruption Department

அதிமுக ஆட்சிக் காலத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்த விராலிமலை விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ மற்றும் அவரது மனைவி மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்துகள் வாங்கியதாக புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்து அங்கு கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பான வழக்கு புதுக்கோட்டை நீதிமன்றத்தில்  நடந்து வருகிறது.

அதேபோல விஜயபாஸ்கர் சென்னை, இலுப்பூர் வீடுகள், திருவேங்கைவாசல் கல்குவாரி, கிரசரில் வருமானவரித்துறை அதிரடி சோதனை செய்ததில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு பெட்டிகளில் அள்ளிச் சென்றனர். அதற்கான விசாரணையும் ஒரு பக்கம் நடந்து வருகிறது.

இந்த நிலையில்,  அந்த ஆவணங்களின் அடிப்படையில் நேற்று முன் தினம் (21.4.2024)  விஜயபாஸ்கரின் இலுப்பூர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதேபோல் சென்னையில் உள்ள அவரது வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.

இந்த நிலையில் இன்று விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கின் விவரங்களை கேட்டு புதுக்கோட்டை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மனு  தாக்கல் செய்துள்ளனர்.  அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை காரணமாகவே விஜயபாஸ்கரின் வீட்டில் சோதனை நடந்ததாக அதிமுகவினர் குற்றம்சாட்டி வந்த நிலையில், தற்போது அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள மனு மீண்டும் அதிமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை; விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்படுகிறாரா அதிமுக வேட்பாளர்?

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
AIADMK candidates nominated by Vijayabaskar may also be questioned

மாஜி அமைச்சர் விராலிமலை விஜயபாஸ்கரின் இலுப்பூர் வீட்டில் இன்று காலை முதல் மதுரை, சென்னை ஆகிய ஊர்களில் இருந்து 3 கார்களில் வந்துள்ள ஒரு பெண் அதிகாரி உள்பட 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வீட்டில் விஜயபாஸ்கரின் அப்பா மற்றும் அம்மா மட்டுமே இருப்பதால் இலுப்பூரை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து குவிந்துள்ள அதிமுகவினர் வீட்டின் முன்னால் நிற்கின்றனர்.

பாஜகவின் அராஜக போக்கால் இப்படி நடப்பதாக கூறும் அவரது ஆதரவாளர்கள், தேர்தலில் பதில் சொல்வோம் என்றும் கூறி வருகின்றனர். மாலை வரை சோதனை தொடரும் என்ற நிலையில் ஒரு காரில் சிலர் வெளியில் சென்றுள்ளனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் வெளியில் சென்ற அமலாக்கத்துறையினரின் கார் எங்கே சென்றுள்ளது என்று தேடி வருகின்றனர்.

மேலும் ஏற்கனவே ரைடுகளில் சிக்கி வெளியில் உள்ள கறம்பக்குடி குளந்திரான்பட்டு மணல் மாஃபியா கரிகாலனின் சகோதரர் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மா.செ கருப்பையாவுடன் நெருக்கமாக உள்ள மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் அவருக்கு அரசு ஒப்பந்தங்களையும் பெற்றுக் கொடுத்திருந்தார் என்பதும் இப்போது அதிகாரிகளுக்குத் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில், திருச்சி நாடாளுமன்றத் தொகுதி பொறுப்பாளர் தங்கமணியை ஓரம்கட்டிவிட்டு எடப்பாடியிடம் கடுமையாக மல்லுக்கட்டி பாசறை கருப்பையாவுக்கு சீட்டு வாங்கிக் கொடுத்துள்ளார். இதேபோல மேலும் சிலருக்கு சீட்டு கிடைக்க பரிந்துரை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதனால் விஜயபாஸ்கரிடம் தொடர்பில் உள்ள திருச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் பாசறை கருப்பையா மற்றும் அவரது தம்பி கரிகாலன் வீடு, மேலும் சில வேட்பாளர்கள் வீடுகளுக்கும் அமலாக்கத்துறை அதிகாரிகள் செல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. மேலிருந்து சிக்னல் கிடைத்தால் ரைடு நிச்சயம் என்கின்றனர் துறை சார்ந்தவர்களே.