தான் பணியாற்றி வரும் பள்ளியில் படித்து வரும் 62 மாணவ, மாணவிகளின் பெற்றோரை நேரில் சந்தித்து தலா 1,000 ரூபாய் வழங்கி உதவி செய்துள்ளார் தலைமை ஆசிரியை ஒருவர்.
அரியலூர் மாவட்டம் துப்பாபு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 34 மாணவர்கள், 28 மாணவிகள் என மொத்தம் 62 பிள்ளைகள் படித்து வருகிறார்கள். இவர்களது பெற்றோர்கள் அனைவரும் ஏழை கூலி விவசாயத் தொழிலாளர்கள். அன்றாடம் கூலி வேலைக்குச் சென்று தங்கள் குடும்பத்தைக் காப்பாற்றி வருபவர்கள்.
பள்ளியில் படிக்கும் 62 மாணவ மாணவியரின் குடும்பத்தினருக்கு உதவித்தொகையாக தலா 1,000 ரூபாய் என ரூபாய் 62 ஆயிரம் வழங்குவது என்று முடிவு செய்தார். அதன்படி ஒவ்வொரு மாணவ மாணவியரின் வீடுகளுக்கும் அவரே நேரில் சென்று பிள்ளைகளின் பெற்றோர்களிடம் பணத்தைக் கொடுத்தோடு மட்டுமல்லாமல் கரோனா நோய் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தி உள்ளார்.
தங்கள் பிள்ளைகளுக்குப் படிப்பு சொல்லிக்கொடுப்பதோடு, வேலை வாய்ப்பு இல்லாமல் வருமானத்திற்கு வழியில்லாமல் இருக்கும் கரோனா காலத்தில் உதவியும் செய்த ஆசிரியை கண்ணகிக்கு கிராம மக்கள் நன்றியைத் தெரிவித்தனர்.