Skip to main content

இடைநிற்றல் மாணவர்களை தேடி சென்று கல்வி பயில வைக்கும் தலைமையாசிரியர்! 

Published on 23/09/2021 | Edited on 23/09/2021

 

Headmaster who leads the way in finding and teaching drop-out students

 

கடந்த இரண்டு ஆண்டு காலமாக பெரும் நோய்த் தொற்றால் பலதரப்பட்ட தொழில்கள் முடங்கிப் போனாலும், கல்வி என்பது மிகவும் பின்தங்கிய நிலைக்குச் சென்றடைந்துள்ளது. அதிலும் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக கூலி வேலைக்குச் செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் தாங்களாகவே முன்வந்து இடைநிற்றல் மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வந்து அவர்களுக்கான கல்வியைக் கற்க வைப்பதில் பெரிதும் முயற்சி செய்துவருகிறார்கள்.

 

அதில், திருச்சி சோமரசம்பேட்டை பகுதியைச் சேர்ந்த அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் நரசிம்மன், இடைநிற்றலால் கல்வி கற்க முடியாமல் தற்போது கூலி வேலைக்குச் செல்லும் மாணவர்களை அழைத்து வந்து பள்ளியில் சேர்த்து படிப்பதற்கான நடவடிக்கையை செய்துவருகிறார். இதுவரை 20க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அவர் மீண்டும் கல்வி கற்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். இந்நிலையில், அவருக்கு சக தலைமை ஆசிரியர்கள் பலரும் நேரிலும் தொலைபேசியிலும் பாராட்டி வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

 

மேலும், சோமரசம்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பணிபுரியும் இடங்களுக்கு நேரில் சென்று அவர்களுக்கு ஆலோசனை வழங்குவதோடு, அவர்களைச் சந்தித்த அதே இடத்தில் பள்ளி சேர்க்கையையும் நடத்தி, மாணவர்களைப் பள்ளிக்கு மீட்டுவரும் பணியை செய்துவருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

5 ஆம் வகுப்பு மாணவிக்கு ஆபாச படம் காட்டிய தலைமை ஆசிரியர்!

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
headmaster arrested under POCSO Act in Coimbatore

கோவையில் ஐந்தாம் வகுப்பு மாணவியிடம் ஆபாசப் படங்களைக் காட்டிய தலைமை ஆசிரியரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிவன் புறம் பகுதியைச் சேர்ந்தவர் பிராங்க்ளின் (44). இவர் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் கடந்த மாதம்  அப்பள்ளியில் படிக்கும் ஐந்தாம் வகுப்பு மாணவி ஒருவரிடமும் தனது  செல்போனில் ஆபாச வீடியோவை காட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி இது குறித்து எனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.  அதைக் கேட்டு ஆத்திரமடைந்த பெற்றோர் மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளனர்.

புகாரின் பேரில் தலைமை ஆசிரியர் பிராங்க்ளின் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர். இதனிடையே பிராங்க்ளினை தலைமை ஆசிரியர் பதிலிருந்து பணியிடைநீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Next Story

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் தலைமறைவு      

Published on 08/11/2023 | Edited on 08/11/2023

 

Headmaster misbehaves with school girls

 

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே பெரிய வடகம்பட்டியில் அரசுத் தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில்  காடையாம்பட்டியைச் சேர்ந்த சின்னராசு (59) என்பவர் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். கடந்த அக். 19ம் தேதி காலையில் பள்ளி வழிபாட்டுக் கூட்டத்தில் நின்று கொண்டிருந்த 5ம் வகுப்பு பயிலும் சிறுமியின் சட்டைப் பையில்,  தலைமை ஆசிரியர் சின்னராசு கையை விட்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதேபோல், அக். 26ம் தேதி காலையில் நடந்த வழிபாட்டுக் கூட்டத்தின்போதும் இரண்டு சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். 

 

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர்கள் ஓமலூர் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் தலைமை ஆசிரியர்  சின்னராசு மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். விவகாரம் காவல்துறை வரை சென்றதை அறிந்த சின்னராசு திடீரென்று தலைமறைவாகி விட்டார். அவரைக் காவல்துறையினர் தேடி  வருகின்றனர்.