Skip to main content

"தலைநகரில் தலை தூக்கும் ரவுடிகள்... 'பட்டி' பார்க்கும் சிட்டி போலீஸ்.!"

Published on 26/06/2019 | Edited on 26/06/2019

10 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய மண்டல ஐஜியாக இருந்த ஜாபர்சேட். ரவுடிகளை ஒடுக்குவதற்காகவே 'டெல்டா ஃபோர்ஸ்' என்ற தனிப்படையை வைத்திருந்தார். திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் அட்ராசிட்டி பண்ணும் ரவுடிகளை நள்ளிரவில் வீடுபுகுந்து இந்த படை தூக்கும். பக்கத்து மாவட்டத்திற்கு கொண்டு சென்று துவைத்து எடுத்து, கைகட்டு போட்டு நிலுவையில் உள்ள வழக்குகளில் சிறையில் தள்ளும் இந்தபடை. 

 “Heading Routes in the rowdies in Capital-police action!


அதாவது சம்பந்தப்பட்ட ரவுடி ஜாமினில் வெளியே வந்தாலும், தண்டனை காலம் முடிந்து வந்தாலும் மேற்கொண்டு ஆக்டிவாக இருக்க முடியாத அளவுக்கு 'கைகட்டு' போட்டு அனுப்பும் இந்தபடை.! இதற்கு பெயர் 'பட்டி பார்த்தல்' என்று தனிப்படை போலீஸார் சொல்வார்கள்.  

police


இந்த பாணியை சென்னை போலீஸாரும் இப்போது பின்பற்றத் தொடங்கி விட்டனர். கடந்த 23-ந்தேதி சென்னையில் தேனாம்பேட்டை, ஐஸ்ஸவுஸ், ராயப்பேட்டை, கோட்டூர்புரம், மயிலாப்பூர் என 5 இடங்களில் மர்மநபர்கள் 2 பேர், டூவீலரில் சென்று பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டனர். சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் துப்புதுலக்கிய தனிப்படை போலீஸார், கொள்ளையர்களில் ஒருவனான ராகேஷை 48 மணிநேரத்தில் கைது செய்தனர். அவனுக்கு 'கைகட்டு' போட்டு சிறைக்கு அனுப்பிய போலீஸார், கூட்டாளி சீனுவை தேடி வருகின்றனர்.

 

 “Heading Routes in the rowdies in Capital-police action!


இதேபோல், 25-ந்தேதி அதிகாலை நீலாங்கரை அருகே சொகுசுகாரில் வந்து விபத்தினை ஏற்படுத்திவிட்டு, மதுபோதையில் போலீஸாரிடம் தகராறு செய்த நவீன் என்ற இளைஞருக்கும் மாவுக்கட்டு போட்டு சிறையில் தள்ளியிருக்கிறது சிட்டி போலீஸ். மதுபோதையில் கொஞ்சம் ஓவராகவே நடந்து கொண்டதால், இவருக்கு போலீஸார் தங்களது பாணியில் விருந்து வைத்து அனுப்பி இருக்கின்றனர்.

'எவன் ஆட்டம் போட்டாலும் பட்டி பார்த்து அனுப்புங்கள், கொஞ்சம் ஓவரா ஆடுனால் போட்டுத் தள்ளுங்கள்' என்று மேலதிகாரி வாய்மொழி உத்தரவு போட்டிருக்காராம். அதனால் தான் இப்போது பட்டி பார்த்தலை போலீஸார் தொடங்கி இருக்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.