Skip to main content

மாணவர்களிடமே பணம் வசூலித்த தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்!

Published on 23/03/2022 | Edited on 23/03/2022

 

Head teacher fired for not appointing a teacher to collect money from students!

 

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஒன்றியம், மழையூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கணிணி தணிக்கையியல் என்ற புதிய பாடப்பிரிவிற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் அரங்கசாமி, கல்வித்துறை அனுமதி கேட்டுள்ளார். ஆனால் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளதால், புதிய பாடப்பிரிவிற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில், தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்து கொள்வதாக அனுமதி பெற்று சுமார் 40 மாணவ, மாணவிகளைச் சேர்த்துள்ளார். 

 

ஆனால் பள்ளி தொடங்கி, ஐந்து மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், இதுவரை கணக்குப் பதிவியல், தணிக்கையியல், வணிகவியல் பாடங்களுக்கு ஆசிரியர் நியமனம் செய்யாததால், பள்ளி மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவரகம் வந்து ஆசிரியர் இல்லாததால் பாடம் நடத்தவில்லை. அதனால் எங்களால் பொதுத் தேர்வு எழுதுவதில் சிரமம் உள்ளதாக மனுக் கொடுத்தனர்.

 

மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து, மாணவர்களை அனுப்பி வைத்தார். தொடர்ந்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி. சத்தியமூர்த்தியிடம், இது குறித்து தகவல் கொடுத்து உடனடியாக மாற்றுப் பணியில் ஆசிரியர் நியமனம் செய்ய உத்தரவிட்டனர். இந்த உத்தரவையடுத்து இரண்டு ஆசிரியர்கள் மாற்றுப் பணியில் மழையூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு செல்கின்றனர்.

 

மனுக் கொடுத்த மாணவர்களும், பெற்றோர்களும் கூறும் போது, "அரசு ஆசிரியர் நியமனம் தாமதமாகும் என்பதால் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்ய வேண்டும். அவர்களுக்கு மாத சம்பளம் கொடுக்க வேண்டும் என்றும் கூறி ஒவ்வொரு மாணவரிடமும் தலா ரூபாய் 250 வீதம் சுமார் 40 மாணவ, மாணவிகளிடம் வசூல் செய்தார். ஆனால் இதுவரை ஆசிரியர் நியமனம் செய்யவில்லை என்று கேட்ட போது, வணிகவியல் படித்தவர்கள் யாரும் இல்லை. உங்களுக்கு தெரிந்தவர்கள் இருந்தால் அழைத்து வாருங்கள் என்று மாணவர்களிடமே கூறினார் தலைமை ஆசிரியர் அரங்கசாமி. அதனால் தான் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்தோம்.

 

மேலும் முனனாள் மாணவர்கள் ஏதேனும் சான்றிதழில் கையெழுத்துப் பெற வந்தாலும், அதற்கென தனி வசூல் செய்கிறார். மாணவிகளுக்கான கழிவறையை திறந்துவிடாமல் மூடியே கிடப்பதால் மாணவிகள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள் என்றனர்.

 

புகார் கொடுத்த மாணவர்களிடம் விசாரித்த கல்வித்துறை அதிகாரிகள் கூறும் போது, "பள்ளித் தொடங்கி 5 மாதமாக ஆசிரியர் இல்லை என்பதைத் துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் மாணவர்கள் நலனில் அக்கரையின்றி செயல்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர் அரங்கசாமி (வயது 58) என்பவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளோம். மேலும் மாணவர்களைத் தேர்வுக்கு தயார்படுத்த மாற்றுப் பணியில் இரண்டு ஆசிரியர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் உள்ள முறைகேடுகள் குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

“எனதருமை மாணவச் செல்வங்களே...” - முதல்வர் வாழ்த்து

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Chief Minister Stalin congratulates students appearing for 10th public exam

தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள், தனித் தேர்வர்கள், சிறைக் கைதிகள் என மொத்தம் 9.38 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.

முதல்நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்கள் தேர்வு நடைபெறவுள்ளது.  செல்போன், உள்ளிட்ட மின்னணு சாதனப் பொருட்களைத் தேர்வு அறைக்குள் கொண்டு செல்லக் கூடாது என்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முறைகேடுகளைத் தவிர்க்க மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதவுள்ள எனதருமை மாணவச் செல்வங்களே... All the best!  நீங்கள் பதற்றமின்றித் தேர்வை எதிர்கொள்ளத்தான் வினாத்தாளைப் படித்துப் பார்க்க முதலில் 10 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இதனை மற்றுமொரு தேர்வாகக் கருதி நம்பிக்கையோடு எழுதி வெற்றி பெறுங்கள். பெற்றோர்களும் உங்கள் பிள்ளைகள் உரிய நேரத்தில் தேர்வு மையத்துக்குச் சென்றிடுவதை உறுதி செய்யுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

தனியார் பல்கலைக்கழகம் எதிரே கஞ்சா சாக்லேட்டுகள் விற்பனை!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
cannabis chocolates seized from snack shop opposite private university.

வேலூர் மாவட்டம் முழுவதும் கஞ்சா, பான் மசாலா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் புழங்குவதைத் தடுக்க மாவட்டம் முழுவதும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது .

காட்பாடி டி.எஸ்.பி. சரவணன் உத்தரவின் பேரில், காட்பாடி ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் தலைமையிலான போலீசார் காட்பாடியில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் (வி.ஐ.டி.) எதிரே உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது அங்கு ஸ்நாக்ஸ் விற்பனை செய்யும் கடையில் சோதனை மேற்கொண்டனர். அந்த கடையில் கஞ்சா சாக்லேட் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து 13 பாக்கெட்டுகளில் விற்பனைக்கு வைத்திருந்த 520 கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்து பீகார் மாநிலத்தைச் சேர்ந்த குஞ்சன் குமார் கம்டி (21) , மனிஷ் குமார் கம்டி(21)  ஆகிய இருவரை காட்பாடி போலீசார் கைது செய்தனர். 

இந்தப் பகுதியில் இதுபோல் பல கடைகளிலும் போதைப் பொருட்கள் விற்பனை செய்வதும் அதை கல்லூரி மாணவ - மாணவிகள் வாங்கி பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை காவல்துறை தொடர்ந்து ஆய்வு மூலம் பறிமுதல் செய்து அதனை விற்பனை செய்பவர்களும் அதன் உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.