Skip to main content

வேலூர் அருகே ஆசிரியை தற்கொலை; தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் 

Published on 23/08/2022 | Edited on 23/08/2022

 

police siren

 

வேலூர் அருகே ஆசிரியர் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

 

வேலூர் குடியாத்தம் அருகில் உள்ள நெல்லூர் பேட்டை அரசு மகளிர் பள்ளியில் தையல் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தவர் நாகேஸ்வரி. இவர் சில தினங்களுக்கு முன்பு  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் . இது தொடர்பாக அவரது மகன் காவல்துறையில் புகார் கொடுத்தார். அந்த புகாரை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் நாகேஸ்வரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

அதனைத் தொடர்ந்து காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் "நாகேஸ்வரி மருத்துவ விடுப்பில் சென்றிருந்ததும், விடுப்பு  முடிந்து மீண்டும் பணியில் சேர மருத்துவ சான்றிதழ்  உடன் நாகேஸ்வரியும் அவரது மகனும் பள்ளிக்கு சென்ற போது அப்பள்ளியின் தலைமை ஆசிரியை, நாகேஸ்வரியை தரக்குறைவாக பேசி அமரவைக்காமல், கொண்டு வந்த மருத்துவ சான்றிதழையும் பெற்றுக்கொள்ளாமல் திருப்பி அனுப்பியதால் மனமுடைந்த நாகேஸ்வரி அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்" என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் காவல் துறையினர் இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

 

இந்நிலையில் வார விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இறந்த  தையல் ஆசிரியை நாகேஸ்வரிக்காக துக்கம் அனுசரித்தனர். 11 மணியளவில் பள்ளியின் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் தலைமை ஆசிரியையின் மீது  நடவடிக்கை எடுக்கக் கோரி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து பள்ளிக்கு வந்த வட்டாச்சியர் மற்றும் கோட்டாச்சியர் ஆசிரியர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களை களைந்து செல்ல வைத்தனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், தலைமை ஆசிரியை பிரமிளா இவாஞ்சலினை தற்காலிக பணியிடைநீக்கம் செய்வதாக தெரிவித்தார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.