The head master who enrolled her daughter in a government school

திருச்சி கிழக்கு ரங்கா நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செல்வராஜ் தன்னுடைய 3வது மகள் யாழினியை 2ஆம் வகுப்பு தமிழ்வழிக் கல்வியில் இன்று (08.07.2021) சேர்த்துள்ளார். அரசு அறிவித்த நல்ல திட்டங்களையும், பள்ளிக்கல்வித்துறையின் மூலம் தமிழ்வழிக் கல்வியை வளர்க்க மகளை தமிழ்வழிக் கல்வியில் சேர்த்துள்ளதாக கூறியுள்ளார். மேலும், நான் மட்டும் அல்லாது என்னைச் சார்ந்த நண்பர்கள், உறவினர்கள், சக ஊழியர்கள் அனைவருக்கும் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட பாடுபடுவேன் எனக் கூறினார்.

Advertisment