Skip to main content

''ஐஏஎஸ்' கனவை 'ஐஎஸ்ஐ' முத்திரை போல பதிய வைத்தவர்'' -சிலாகிக்கும் மக்கள் சிந்தனை பேரவை

Published on 01/07/2023 | Edited on 01/07/2023

 

"He who instilled the dream of 'IAS' in the youth like an 'ISI' stamp"-makkal sinthanai Council

 

தமிழகத்தின் தலைமைச் செயலாளராக செயல்பட்டு வந்த இறையன்பு நேற்றுடன் ஓய்வு பெற்றார். அதனையொட்டி தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனாவை தமிழக அரசு நியமித்தது. நேற்று தலைமைச் செயலகத்தில் தனது பொறுப்புகளை சிவ்தாஸ் மீனாவிடம் முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு ஒப்படைக்கும் நிகழ்வு நடைபெற்றது. 1990 ஆம் ஆண்டு பணியைத் துவங்கிய இறையன்பு, தனது 33 ஆண்டுகால பணியினை நேற்றுடன் நிறைவு செய்தார்.

 

இந்நிலையில் ஈரோட்டை சேர்ந்த 'மக்கள் சிந்தனை பேரவை' தலைவர் ஸ்டாலின் குணசேகரன் இறையன்பு குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'ஆயிரக்கணக்கான தமிழக இளைஞர்களின் மனதில் 'ஐஏஎஸ்' கனவை 'ஐஎஸ்ஐ' முத்திரை போல பதிய வைத்தவர்' தமிழக மாணவர்கள் பலருக்கு தன்னம்பிக்கையூட்டி அவர்களை 'ஐஏஎஸ்' படிக்க தட்டியெழுப்பியவர். இவரால், இவரது உரைகளால், இவரது எழுத்துக்களால், ஐஏஎஸ் வெற்றி படிக்கட்டுகள் என்ற இவரது ஆழமும், அகலமுமான மிக அற்புத நூலின் தூண்டுதலால், பச்சை தமிழர் பலர் புகழ்மிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாக உருவெடுத்தனர். உயர்ந்தனர். 

 

"He who instilled the dream of 'IAS' in the youth like an 'ISI' stamp"-makkal sinthanai Council

 

அடங்காத அறிவுத்தாகம் கொண்ட இவர் ஐஏஎஸ் அதிகாரியாக வந்த பின்னர் மூன்று பிஹெச்டிகளை முடித்தவர். சிறிதும் பெரிதுமாக 100 நூல்களை எழுதி வெளியிட்டவர். சமீபத்தில் வெளியான 'மூளைக்குள் சுற்றுலா' என்ற 625 பக்கங்களை கொண்ட இவரது பெருநூல் ஒரு மணிமகுடம். மக்கள் சிந்தனை பேரவையின் சார்பில் தேர்வு செய்யப்பட்ட 125 கல்லூரி மாணவர்களுக்கான ஒரு நாள் பயிலரங்கில் 2014 இல் பங்கேற்றதோடு காலை 10 மணியிலிருந்து மாலை 6 மணி வரை நின்று கொண்டே மாணவர்களுக்கு ஆளுமை பயிற்சி எடுத்த இறையன்பு அவர்களின் உணர்வும், பண்பும் என்றென்றும் நினைத்து மகிழத்தக்கதாகும். 

 

பயிற்சி வகுப்பு எடுப்பதிலும், பயிற்சி கொடுப்பதிலும் அவருக்கு அளவற்ற ஈடுபாடு. வகுப்பின் நிறைவு பகுதியின் போது மாணவர்கள் அனைவரையும் பெயர் சொல்லி அழைத்ததை எண்ணி மாணவர்கள் மட்டுமல்ல, நாங்கள் அனைவருமே வியந்து போனோம். காலையில் அறிமுகப்படலத்தின் போது அவரவர் எழுந்து தங்களின் பெயர்களை உச்சரித்ததை மனதில் வைத்து மாலையில் அவர்களின் பெயர்களை நினைத்துச் சொல்லும் அவரின் நினைவாற்றல் பிரமிப்பை ஏற்படுத்தியது.

 

ஈரோடு புத்தகத் திருவிழாவில் இறையன்பு ஆற்றிய சொற்பொழிவுகள் அனைத்தும் தனித்தனியாக முத்திரை பதித்தவை. 2008 இல் 'ரௌத்திரம் பழகு' என்ற தலைப்பிலும் 2012 இல் 'நாம் ஏன் அடிமையானோம்' என்ற தலைப்பிலும், 2015 இல் 'வனநாயகம்' என்ற தலைப்பிலும் 2017 இல் ‘எது ஆன்மீகம்’ என்ற தலைப்பிலும், 2020 இல் 'பயணங்கள் முடிவதில்லை' என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தியுள்ளார். ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத தலைப்புகள். ஆனால் தனிநூலாக வெளியிடும் தரத்திலும் தயாரிப்பிலும் நிகழ்த்தப்பட்ட ஆழமான ஆய்வுரைகள். இவை மக்கள் சிந்தனை பேரவைக்கு கிடைக்கப்பெற்ற அனுபவங்கள்.

 

"He who instilled the dream of 'IAS' in the youth like an 'ISI' stamp"-makkal sinthanai Council

 

ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கு இதுபோன்ற ஆயிரமாயிரம் அனுபவங்கள் அவர் மூலம் கிட்டியுள்ளன. அரசு பணியாளராக அவர் ஆற்றிய நற்பணிகள் அந்தந்த பகுதிகளில் அவர் பெயரை காலகாலத்திற்கும் சொல்லும் கல்வெட்டுகள் போல் நிலைபெற்றிருக்கின்றன. உச்ச அதிகாரம் பெற்ற உயர் மனிதன் என்ற சுவடே இல்லாமல் இவரால் இயல்பாக நடந்துகொள்ள முடிந்துள்ளது. அதிகாரம் இவரின் கண்களை மறைத்ததில்லை. உயர் அதிகாரி என்ற பிம்பம் இவரின் உடல்மொழியில் ஒட்டவில்லை.

 

இறையன்பு ஐஏஎஸ் இப்போது தலைமைச் செயலாளர் பொறுப்பில் இருந்து பணிநிறைவு பெற்றுள்ளார். இனிமேல் இவரின் பணி, சுதந்திர தமிழ்நாட்டை உருவாக்கும் சூத்திரங்களை உள்ளடக்கியதாக விளங்கும். இவரின் அறிவும் ஆற்றலும் தன்னம்பிக்கையோடு தமிழக இளைஞர்களை விளங்க வைப்பதாக அமையும், அமைய வேண்டும். பதவியில் இருந்த காலத்தில் மக்கள் சிந்தனை பேரவையின் முன்னெடுப்புகளுக்கு முழு ஒத்துழைப்பை நல்கிய இவருக்கு இவரின் பணி நிறைவு நேரமே நன்றி சொல்வதற்கு ஏற்ற காலம் என்று கருதியே பேரவை சார்பில் இந்த அறிக்கையை பதிவிடுகிறோம். அவரின் வெற்றி பயணம் முழு வீச்சோடு தொடரும். தொடர வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இறந்து கிடந்த ஆண் யானை; வனத்துறையினர் விசாரணை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest department investigation


                                கோப்புப்படம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் விவசாய தோட்டத்தில் புகுவதும்,  உணவுக்காக சாலையில் உலா வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கும்டாபுரம் அருகே ஆண் யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டனர். இதுபற்றி தாளவாடி வனச்சரக அலுவலர் சதீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையில் மருத்துவக் குழுவினர் இறந்த யானையின் உடலை அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்தனர்.

இதில் இறந்த யானைக்கு சுமார் 18 வயது இருக்கும் எனத் தெரிவித்தனர். ஆண் யானையின் தந்தங்கள் இல்லாததால் யானை சுட்டுக் கொல்லப்பட்டதா? அல்லது விஷம் வைத்து கொல்லபட்டதா?  அல்லது இறந்த கிடந்த யானையின் தந்தங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா? என வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பிரேதப் பரிசோதனை மாதிரிகளையும் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறந்த யானை உடலை மற்ற வனவிலங்குகளுக்காக வனப்பகுதியில் விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.