ADVERTISEMENT

'அவர் ரொம்ப தைரியமானவர்'- வைரலாகும் நடிகர் மாரிமுத்துவின் செல்ஃபி

05:23 PM Sep 08, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

நடிகர் மற்றும் இயக்குநரான மாரிமுத்து(57) மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இன்று காலை, சின்னத்திரையில் அவர் நடித்து வரும் சீரியலுக்காக டப்பிங் பேசிக்கொண்டிருந்த அவர், திடீரென மயக்கம் போட்டு விழ, அருகில் இருந்த ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, நெஞ்சுவலி காரணமாக இறந்து விட்டதாக உறுதி செய்துள்ளனர். சென்னையில் உள்ள இவரது இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது.

பிரபலங்கள், பொதுமக்கள் என பலதரப்பட்டவர்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் மாரிமுத்து நடித்த படத்தின் இயக்குநர் பகவான் கிருஷ்ணா என்பவர் செய்தியாளர்களைச் சந்தித்து அவருடைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.அவர் பேசுகையில், ''நான் பகவான் கிருஷ்ணா ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறேன். எங்களுடைய படத்தின் பெயர் .விழா நாயகன். அதில் முக்கியமான கதாபாத்திரத்தில் மாரிமுத்து நடித்துள்ளார். படத்திலும் அவர் இறந்து விடுவதைப் போல ஒரு சீன் வருகிறது. அதற்கு நாங்கள் 'இமயம் சரிந்தது' என பேனர் எல்லாம் செட் பண்ணி வைத்திருந்தோம். அந்த பேனர் முன்னாடி நின்று செல்ஃபி எடுத்துக் கொண்டார். அந்த அளவிற்கு அவர் தைரியமான மனிதர். ரொம்ப அற்புதமான மனிதர். படத்திலும் இதுபோலதான் பேசிக் கொண்டிருக்கும் போதே இறந்திடுவார். எங்களால் நம்பவே முடியவில்லை. அவர் இறப்பதற்கும் முன்பு ஒரு நீளமான டயலாக் பேசுவார். அதான் படத்தினுடைய கன்டென்ட். அந்த படம் வரும்போது அவருடைய கேரக்டர் எல்லோருக்கும் தெரியவரும். ரொம்ப மிஸ் பண்ணுகிறோம் அவரை'' என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT