Skip to main content

"அவர் முதலில் அரசியல் சாசன சட்டத்தைப் படிக்க வேண்டும்"- ப.சிதம்பரம் பேட்டி!

Published on 16/02/2022 | Edited on 16/02/2022

 

"He must first read the Constitution" - P. Chidambaram interview!

 

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் பேரூராட்சியில் மதசார்பற்ற கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம், கீரமங்கலம் உள்கடை வீதியில் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகையில், "அ.தி.மு.க.வினர் மேடையில் பேசும் வசனங்களைக் கேட்டு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. அவர்கள் பேப்பர் படிப்பதையும், தொலைக்காட்சி பார்ப்பதையும் நிறுத்திவிட்டார்கள் போல, அதனால் தான் தி.மு.க. எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என்று கூறுகின்றனர். 

 

அதுவும் தி.மு.க உள்ளாட்சித் தேர்தலை நடத்துவோம் என்று வாக்குறுதியை நிறைவேற்றியுள்ள நிலையில், அந்த தேர்தல் மேடையில் நின்றே எப்படி வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று  எந்த நிதானத்தில் அவர்கள் பேசுகின்றனர் என்று தெரியவில்லை. ஐந்து ஆண்டுக்குள் தி.மு.க. சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என நம்புகிறோம். குடும்ப தலைவிகளுக்கான ரூபாய் 1,000 மார்ச், ஏப்ரல் மாதங்களில் கொடுப்பார்கள் என்று நினைக்கிறேன். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதானமாக அடியெடுத்து வைக்கிறார். கூட்டணி கட்சி எதிர்க்கட்சிகளிடம் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கிறார். இப்படியே ஆட்சி செய்யும் போது அடுத்த ஆட்சியையும் பிடிக்கலாம்" எனத் தெரிவித்தார்.

 

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், "காங்கிரஸ் கட்சியின் ஜெராக்ஸ் ஆம் ஆத்மி என பிரதமர் மோடி சொல்லி இருப்பது வேடிக்கையாக உள்ளது. கோவாவில் ஆம் ஆத்மி வாக்குகள் காங்கிரஸ் கட்சிக்குத் தான் பாதிப்பை ஏற்படுத்தும். ஆம் ஆத்மி பா.ஜ.க.வுக்கு ஆதரவாக தான் நிற்கின்றனர். நாங்கள் சொல்ல வேண்டியதை அவர்கள் திரும்ப சொல்கிறார்கள். பஞ்சாப்பை பொறுத்தவரையில் மூன்று மாதத்திற்கு முன்பே பா.ஜ.க விற்கு மக்கள் பிரியாவிடை கொடுத்து விட்டனர்.

 

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு பிரச்சாரத்திற்கு வரட்டும். யாரும் வர வேண்டாம் என்று சொல்லவில்லை ஆனால் உள்ளாட்சித் தேர்தலை அவர்கள் ஆட்சி காலத்தில் 2016- ஆம் ஆண்டு ஏன் நடத்தவில்லை என்ற கேள்விக்கு பதில் சொல்லிவிட்டு, அவர் பிரச்சார களத்திற்கு வந்து வாக்குகளைக் கேட்கட்டும். 

 

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை ஒரு முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி. அவர் முதலில் அரசியல் சாசன சட்டத்தைப் படிக்க வேண்டும். சட்டமன்றத்தை முடக்க முடியாது ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதெல்லாம் அபத்தமான வார்த்தை, சட்டமன்றம் என்ன ஜல்லிக்கட்டு காளையா அடக்க, ஜல்லிக்கட்டு காளையை அடக்குவது போல் சட்டமன்றத்தை முடக்க முடியாது. தமிழகத்தில் 2026- ல் தான் அடுத்த சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் அதற்கிடையே சட்டமன்றத் தேர்தல் குறித்து பேசுவது அவர்களின் அறியாமையைக் காட்டுகிறது" என்றார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

செஞ்சுரிக்கு மத்தியில் சிலிர்க்க வைத்த மழை

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
summer rain in madurai

பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து வரும் நிலையில் ஒரு சில இடங்களில் பெய்த மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மதுரையின் நகரப் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.

மதுரையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதுரையின் நகரப் பகுதி மற்றும் கோரிப்பாளையம், தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஒரு சில இடங்களில் நீர் தேங்கியதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிறிது சிரமத்திற்கு உள்ளாகினர்.

மதுரையின் பழங்காநத்தம், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மழை பெய்த நிலையில் பிற்பகலுக்கு மேல் தற்பொழுது கோரிப்பாளையம் தல்லாகுளம் பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. அதேபோல் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பின்படி நீலகிரி, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், சேலம், நாமக்கல், கரூர், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, சிவகங்கை ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.