Skip to main content

இவரல்லவோ எம்.எல்.ஏ. -தங்கமான தங்கப்பாண்டியன்!

Published on 05/04/2020 | Edited on 05/04/2020

‘இருக்கிற இடம் தெரியாம இருந்துட்டு போயிருவோம்..’ என்ற கொள்கை(?) பிடிப்புடன் உள்ள ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் பலரை  நாம் பார்த்திருப்போம். ராஜபாளையம் திமுக எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன் அந்த ரகமல்ல.

 

 He is the MLA. - Good thangapandian


‘பொதுமக்களுக்கு ஒரு லட்சம் முக கவசங்கள் வழங்கும் திமுக எம்.எல்.ஏ.’ என்னும் தலைப்பில், இன்று நமது இணையத்தில் செய்தி வெளியிட்டிருந்த நிலையில், “எம்.எல்.ஏ. இன்னும் என்னென்ன நல்ல காரியங்கள் செய்திருக்கிறார் தெரியுமா?” என்று ராஜபாளையம் தொகுதியிலிருந்து அவர் குறித்து உடன்பிறப்புகள் சிலாகித்து சொன்ன தகவல்கள் இதோ - ‘ராஜபாளையம் தொகுதியிலுள்ள நியாய விலை கடைகளில் வழங்கப்படும் அரிசியில் கருப்பு அதிக அளவில் இருப்பதால், மக்கள் அதைச் சமைத்து சாப்பிட முடியாது..’ என்று புகார் வர, கிருஷ்ணாபுரம் ஊராட்சியிலுள்ள நியாய விலை கடை, ராஜபாளையம் வார்டு 4-ல் உள்ள நியாய விலை கடை, ஆவாரம்பட்டியிலுள்ள நியாய விலை கடை என ஒரு ரவுண்ட் வந்து ஆய்வு மேற்கொண்ட எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன், உடனடியாக  டி.எஸ்.ஓ.வை தொடர்புகொண்டு அரிசியை மாற்றி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக,  தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு, சட்டமன்ற உறுப்பினரான தனது 44-வது மாத ஊதியம் ரூ.1,05,000-ஐ RTGS மூலம் வழங்கியிருக்கிறார். ‘தங்கமான மனிதர்.. எம்.எல்.ஏ. என்றால் இவர்போல் இருக்க வேண்டும்’ என விருதுநகர் மாவட்ட உடன்பிறப்புகள் மத்தியில்  நல்ல பெயர் எடுத்திருக்கிறார், தங்கப்பாண்டியன்!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் கடிதம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
MLAs letter to Chief Electoral Officer Satyapratha Sahu

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 69.72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக கடந்த 21 ஆம் தேதி (21.04.2024) அறிவித்திருந்தது. அதில் அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 81.20 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.96 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்தனர். இதன் ஒருபகுதியாக அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள், பெயர்பலகைகள், எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களின் அலுவலகங்கள் சீல் வைக்கப்பட்டன.

இந்நிலையில் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிற்கு எம்.எல்ஏ.க்கள் கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில், “தேர்தல் முடிந்து ஒரு வாரம் ஆகிவிட்டதால் மக்கள் பணியாற்ற எம்.எல்.ஏ அலுவலகங்களை திறக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர். இது குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விரைவில் முடிவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.