Skip to main content

நான் தவறு செய்யவில்லை: அவன் பல பெண்களை ஏமாற்றியவன்: தற்கொலைக்கு நான் முயன்றேன்: நிலானி கண்ணீர் பேட்டி

Published on 18/09/2018 | Edited on 18/09/2018


 

nilani nila



தன்னிடம் பழகிய உதவி இயக்குநர் காந்தியை நண்பராக மட்டுமே கருதினேன். ஆனால் அவர் என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினார். மேலும் தான் கலந்து கொள்ளும் படப்பிடிப்பு தளத்திற்கும் வந்து தொந்தரவு கொடுத்ததாக சின்னத்திரை நடிகை நிலானி கடந்த 15ஆம் தேதி மயிலாப்பூர் காவல்நிலையத்தில் ஒரு புகார் அளித்திருந்தார். 

 
புகாரைப் பெற்ற போலீசார், இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நிலையில் 16ஆம் தேதி கே.கே.நகரில் காந்தி தீக்குளித்தார். கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அவர் கொண்டு செல்லப்பட்ட காநதி, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 
 

இந்த நிலையில் நிலானி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தப்போது, தனக்கு 2 குழந்தைகள் இருப்பதாக கூறிய அவர், தாம் எந்த தவறும் செய்யவில்லை, தலைமறைவாகவில்லை. 3 ஆண்டுகளுக்கு முன் காந்தி லலித் குமார் தமக்கு பழக்கமானார். தம்மை திருமணம் செய்துக் கொள்ளும்படி காந்தி லலித் கூறியதாக  பேட்டியளித்தார். 
 

இரண்டு நாட்களாக என்னைப் பற்றிய செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. அதில் எதுவும் உண்மையில்லை. நான் கணவர் இல்லாமல் இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். கடந்த 3 வருடங்களுக்கு முன்பு காந்தி லலித்குமார் என்பவருடன் எனக்கு நட்பு கிடைத்தது. அவரால் சின்ன சின்ன உதவிகள் கிடைத்திருக்கிறது. 
 

குழந்தைகளை பள்ளியில் இருந்து வீட்டுக்கு அழைத்து வருவது. பள்ளிக்கு கொண்டு விடுவது போன்ற உதவிகள் கிடைத்திருக்கிறது. இப்படிப் பழகிக்கொண்டிருக்கும்போது நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று என்னிடம் கேட்டார். எனது கணவர் என்னை கைவிட்டுவிட்டு இன்னொரு பெண்ணுடன் சென்றுவிட்டார். நான் எனது குழந்தைகளுக்காக வாழ்ந்துகொண்டிருப்பதால் இரண்டாவது திருமணம் பற்றி நினைக்கவில்லை. குழந்தைகளுடன் இன்று வரை நான் மிடில் கிளாஸ் வாழ்க்கைத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். 
 

என் குழந்தைகளின் நலனை கருதி நான் இரண்டாவது திருமணம் வேண்டாம் என்று இருந்தேன். போக போக சின்ன சின்ன உதவிகள் செய்து அவர் ரொம்ப நல்லவர் மாதிரி நடந்துகொண்டார். 
 

எனக்கு தேவையில்லாத அழைப்புகள் வந்தது. அப்போது ஒரு பாதுகாப்புக்காவது இரண்டாவது திருமணம் பண்ணிக்க வேண்டும் என்று தோன்றியது.  காந்தி லலித்குமாருடன் பழகியது உண்மை. கல்யாணம் பண்ணிக்கொள்ளலாம் என்று நினைத்தது உண்மை. அதனை நான் மறுக்கவில்லை.
 

ஒரு ஷாட் பிலிம் எடுத்தோம். அதற்காக இரண்டு, மூன்று போட்டோக்கள் எடுத்துக்கொண்டோம். அதனை எனது அனுமதி இல்லாமல், எனது பேஸ்புக் ஐடியை திருடி காந்தி லலித்குமார் என்னுடைய பேஸ்புக்கில் நான் போஸ்ட் பண்ணியிருந்த மாதிரி அவர் பண்ணியிருந்தார். ஐ லவ் யூ என்று நான் போட்ட மாதிரி அந்த ஆள் போட்டார். இதுதான் எங்களுக்குள் வந்த முதல் பிரச்சனை. இது நான் பண்ண தப்பு கிடையாது. 
 

காந்தி லலித்குமாருக்கு நான்தான் மனைவி என்பதுபோல் அந்த ஆள் கிரியேட் பண்ணினார். இவர் எனது மனைவி, இவர் எனது மனைவி என எல்லோரிடமும் காண்பித்தார். பெயர் கெட்டுப்போற மாதிரி ஆகிவிட்டதால் இவரையே கல்யாணம் பண்ணிக்கலாம் என்று சொல்லிவிட்டேன். 
 

அதன் பிறகு அவன் செல்போனை பார்த்த பிறகுதான் எனக்கு தெரிய வந்தது. பல பெண்களை ஏமாற்றி கல்யாணம் பண்ணிக்கொள்வதாக கூறி காசு பிடிக்கியிருக்கிறான். நிறைய பெண்கள் வாழ்க்கையில் விளையாடி இருக்கிறான். இது தெரிந்தவுடனேயே இந்த மாதிரி ஒரு ஆளை நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் என்று முடிவு செய்தேன். என் வீட்டுக்கே வரக்கூடாது என்று விரட்டினேன். 
 

திரும்பி திரும்பி என்னை டார்ச்சர் செய்தான். போட்டோக்களை வெளியில் விடுவேன் என்று மிரட்டினான். டார்ச்சர் தாங்காமல் வீட்டை காலி பண்ணிவிட்டு வேறு இடத்திற்கு சென்றேன். அங்கேயும் என்னை விடவில்லை. அங்கு வீட்டுக்குள் நுழைந்து எனக்கு தாலி கட்ட முயற்சி செய்தான். 
 

இதனை நான் காந்தி லலித்குமார் வீட்டில் உள்ளவர்களிடம் சொன்னேன். அவருடைய தம்பியிடம் சொன்னேன். அப்போது அவர்கள், அவனை நம்பாதீங்க. அவன் நல்லவன் இல்லை. எங்க அம்மா செத்ததுக்கு அவன்தான் காரணம் என்று சொன்னார்கள். 
 

அதிலிருந்து நான் அவரினம் இருந்து விலகி இருந்தேன். மீண்டும் என் வீட்டுக்குள் புகுந்து என்னை தாக்கினான். அதில் அடிப்பட்டு 10 நாள் கேஎம்சி மருத்துவமனையில் இருந்தேன். 2016ல் போலீசில் புகார் கொடுத்து மதுரவாயல் போலீஸ் ஸ்டேசனில் விசாரித்தார்கள். அப்போதே இருவரையும் கூப்பிட்டு பேசி இருவருக்கும் தொடர்பு கிடையாது, அந்த லேடியை பாலோப் பண்ணாதீங்க என்று அனுப்பி வைத்துவிட்டார்கள். 
 

திரும்ப திரும்ப வந்து டார்ச்சர் செய்தது அவன்தான். கடந்த இரண்டு மாசமா நரக வேதனையை அனுபவிக்கிறேன். கையை கிழித்துக்கொண்டு நான் தற்கொலைக்குக் கூட முயன்றிருக்கிறேன். அவன் ஒரு சைக்கோ. நான் ஒத்துக்கொள்ளவில்லை என்பதற்காக என் குழந்தைகளை அடித்திருக்கிறான். இவ்வாறு கூறினார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பழைய சம்பவங்களை கேட்காதீர்கள். இப்போது புதிய பிரச்சனை... பேட்டியின் போது நடிகை கண்ணீர்...

Published on 21/06/2019 | Edited on 21/06/2019

 

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின்போது, போலீசார் பற்றி பேசி போலீஸ் உடையில் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டவர் நிலானி. தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த இவருக்கு திருமணம் ஆகி இரணடு குழந்தைகள் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக குழந்தைகளுடன் வளசரவாக்கத்தில் வசித்து வந்தார். 


 

 

அப்போது திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த காந்தி லலித்குமார் என்ற திரைப்படய உதவி இயக்குநருடன் நட்பு ஏற்பட்டு, பின்னர் காதலாக மாறியது. பின்னர் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த நிலையில் காந்தி லலித்குமார் தீக்குளித்து இறந்தார். இதையடுத்து நிலானி தனது குழந்தைகளுடன் போரூர் அருகே குடியேறினார். இந்த நிலையில் நேற்று அவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து புகார் அளித்தார். 

 

nilani serial actress


 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 
 

பழைய சம்பவங்கள் பற்றி என்னிடம் எதுவும் கேட்காதீர்கள். இப்போது புதிய பிரச்சினையில் சிக்கி உள்ளேன். பல்வேறு பிரச்சினைகளில் சிக்கியதால் நடிக்க வாய்ப்பும் கிடைக்கவில்லை. 2 குழந்தைகளோடு நான் வாழ்வாதாரத்திற்கு கஷ்டப்பட்டு வந்தேன். என் வாழ்வில் நடந்த விரும்பத்தகாத சம்பவங்களால் இரண்டு குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்று, உயிர் பிழைத்துள்ளேன்.
 

என் நிலையை அறிந்து, சமூகவலைதளமான ஃபேஸ்புக் வாயிலாக அறிமுகமானார் மஞ்சுநாதன். உதவி செய்வதாக கூறினார். வேலூரை சேர்ந்த மஞ்சுநாதனுடன் எனக்கு அறிமுகம் கிடைத்தது. எனது கஷ்ட நிலையை பார்த்து அவர் எனக்கு உதவி செய்வதாக கூறினார். வெளிநாட்டில் என்ஜினீயராக வேலை பார்ப்பதாக அவர் தெரிவித்தார். அடிக்கடி செல்போனில் பேசுவார். என்னை நேரடியாகவும் வந்து சந்தித்தார்.

என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறினார். நானும் அதற்கு சம்மதித்தேன். எனினும் அவரது பெற்றோரின் சம்மதம் பெற்றுத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவரிடம் தெரிவித்து இருந்தேன். அவர் திருமணம் ஆகாதவர் என்று நினைத்திருந்தேன். ஆனால் அவர் திருமணமாகி 2 குழந்தைகளுக்கு தந்தை என்று பின்னர் தெரியவந்தது.
 

இதனால் அவரோடு பழகுவதை நிறுத்திக் கொண்டேன். ஆனால் அவர் எனக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறார். எனக்கு அவர் ஒரு செல்போன் வாங்கி தந்தார். திடீரென எனது வீட்டிற்கு வந்த அவர் செல்போனை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார். அந்த செல்போனில் இருந்த எனது படங்களை தவறாக பயன்படுத்துவேன் என்று கூறி மிரட்டினார்.


 

 

எனது குளியல் அறையில் கேமரா பொருத்தி என்னை படம் பிடித்து வைத்துள்ளதாகவும் கூறினார். அதனை இணையதளத்தில் வெளியிடுவேன்,  எனது முகத்தில் ஆசிட் வீசுவேன் என்றும் கொலை மிரட்டல் விடுத்தார். கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்த இந்த நேரத்தில்கூட என்னை செல்போனில் அழைத்து மிரட்டினார்.
 

அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரிடம் உள்ள எனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக தான் புகார் கொடுக்க வந்தேன் என கண்ணீருடன் பேட்டி அளித்தார். 

 

Next Story

அபிராமியோட என்னை கம்பேர் பண்றாங்க... கதறி அழுத நடிகை நிலானி

Published on 18/09/2018 | Edited on 18/09/2018
nilani nila



தன்னிடம் பழகிய உதவி இயக்குநர் காந்தியை நண்பராக மட்டுமே கருதினேன். ஆனால் அவர் என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினார். மேலும் தான் கலந்து கொள்ளும் படப்பிடிப்பு தளத்திற்கும் வந்து தொந்தரவு கொடுத்ததாக சின்னத்திரை நடிகை நிலானி கடந்த 15ஆம் தேதி மயிலாப்பூர் காவல்நிலையத்தில் ஒரு புகார் அளித்திருந்தார். 

 
புகாரைப் பெற்ற போலீசார், இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நிலையில் 16ஆம் தேதி கே.கே.நகரில் காந்தி தீக்குளித்தார். கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அவர் கொண்டு செல்லப்பட்ட காநதி, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 
 

இந்த நிலையில் நிலானி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தப்போது, 
 

சம்பவம் நடந்த அன்று நான் கேகே நகரில் ஷீட்டிங் முடித்துவிட்டு நான் ஆட்டோவில் கிளம்பினேன். இவன் ஷீட்டிங் ஸ்பாட்டுக்கு வண்டியில வரான். நான் அங்கிருந்து கிளம்பிய ஒரு மணி நேரத்தில் என்னுடைய அசிஸ்டென்ட் போன் பண்ணி, மேடம் இங்க ஒருத்தர் தீக்குளிச்சிட்டார் என தெரிவித்தார்.
 

எனக்கு ஒரு டவுட் வந்தது. நேரா கிளம்பி கேகே நகர் போலீஸ் ஸ்டேசனில் போய் விசாரித்தேன். யார் தற்கொலை பண்ணியதுன்னு. காந்தி லலித்குமார் என்று சொன்னாங்க. எங்க கொண்டு போயிருங்காங்கன்னு கேட்டு அங்கேயும் போய் பார்த்தேன். அவன் எதிரியாகவே இருக்கட்டும். எனக்காக போயிருக்குன்னு நான் பீல் பண்ணினேன். ஆஸ்பத்திரியில் போய் இருந்தேன். அவன எப்படியாவது காப்பாத்துங்கன்னு. ஆனா அங்க இருக்கிறவங்க, நீங்க இங்க இருந்தால் உங்கள அடிச்சுருவாங்க, கொன்னுருவாங்க நீங்க கிளம்புங்கன்னு சொன்னதால அங்கிருந்து வந்துட்டேன். மற்றப்படி நான் தலைமறைவாகவில்லை. இதில் என் தப்பு என்ன இருக்கிறது. 
 

காந்தி லலித்குமார் சகோதரர் உங்களை குற்றம் சாட்டுகிறாரே. நீங்க ஏமாற்றிவிட்டதாக கூறுகிறாரே
 

நான் எந்த வகையில் ஏமாற்றினேன். அவரோட சகோதரர், சகோதரிக்கு தெரியும் அவரால் நான் எப்படிப்பட்ட சித்ரவதையை அனுபவித்தேன் என்று. நான் எந்த வகையில் பொறுப்பு என்று எனக்கு தெரியவில்லை. 

உங்களிடம் இருந்து அவர் பணம் வாங்கியிருக்கிறாரா இல்லை நீங்க அவரிடம் பணம் வாங்கியிருக்கிறீர்களா

அப்படி எதுவும் இல்லை. செலவுக்கு பணம் கொடுப்பேன். அவ்வளவுதான். மற்றப் பெண்களிடம் நிறைய ஏமாற்றியிருக்கிறார். என்னிடம் உண்மையை லவ் பண்றதா சொல்லியிருக்கிறார். எனக்கு லவ்வும் வேணாம். இன்னொரு கல்யாணமும் வேணாமுன்னு நான் தெளிவாக இருந்தேன். 
 

எப்படி அறிமுகமானார்
 

சினிமா மூலமாகத்தான். நிறைய டைரக்டரிடம் போட்டோஸ் கொடுப்பதாக கூறி அறிமுகமானார். போக போக நல்லா பழகினோம். இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் ஒரு பொம்பள பொறுக்கி என்று தெரிந்து இரண்டு குழந்தைகளை வைத்திருக்கும் நான் எப்படி அவனிடம் பழகுவது. என்னை ரொம்ப கேவலமா சோஷியல் மீடியாவில் போடுறாங்க. அபிராமியோட என்னை கம்பேர் பண்றாங்க... என கண்ணீரோடு கூறினார்.