Skip to main content

ஹாவாலா பணத்தில் மோசடி? சர்ச்சையில் சிக்கிய காவல் நிலையம்...

Published on 18/07/2020 | Edited on 18/07/2020
img

 

 

தென்காசி மாவட்டத்தின் ஆவங்குளம் காவல் நிலையத்திற்குட்பட்டது தென்காசி - நெல்லை சாலை. கேரளாவின் கொல்லத்திலிருந்து தொடங்கும் இந்த நாற்புற சாலையில் கடந்த 4 தினங்களுக்கு முன்பு மாலை 4.30 மணியளவில், தென்காசி – நெல்லை மெயின் ரோட்டில் இரண்டு பேர் பைக்கில் வந்து கொண்டிருந்தனர். பின் சீட்டில் அமர்ந்திருப்பவர் கையில் ஜவுளி கடையின் பெரிய பை கொண்ட பார்சல் வைத்திருந்திருக்கிறார். இந்த பைக் ஆலங்குளம் மின்வாரிய அலுவலகம் வரும்போது எதிரே வந்த பைக்கில் மோதிவிட இரண்டு பைக்களிலும் வந்தவர்கள் கீழே விழுந்திருக்கிறன்றனர். அப்போது நெல்லை நோக்கி சென்ற பைக்கில் வந்தவர் வைத்திருந்த பெரிய பை, மோதியதில் ரோட்டில் விழுந்து சிதறியிருக்கிறது... சிதறியது கட்டுக்கட்டான பணம்.

 

பதற்றத்தில் அவர் அந்த பணக்கட்டுகளை அள்ளி எடுத்து பையில் திணித்து கொண்டிருந்ததை பார்த்த சிலர் ஆலங்குளம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சிறப்பு எஸ்.ஐ.யான பேச்சிமுத்து சம்பவ இடத்திற்கு வந்து பைக்கில் வந்த இருவரையும் பணத்தையும் கைப்பற்றி போலீஸ் நிலையம் அழைத்துக்கொண்டு போயிருக்கிறார்.

 

ஆலங்குளம் காவல்நிலையத்தின் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் பணி ஓய்வு பெற்று போய்விட்டார். முறையான எஸ்.ஐ.யும் ஸ்டேஷனுக்கு நியமனம் செய்யப்படவில்லை. காவல் நிலைய ஆய்வாளரும், எஸ்.ஐ.யும் இல்லாமல் அந்த ஸ்டேஷன் சிறப்பு எஸ்.ஐ. மற்றும் போலீசார்களின் பொறுப்பிலிருந்திருக்கிறது.

 

எந்த ஒரு குற்ற செய்கை என்றாலும் பிடிபட்டவருடன் தொடர்புடையதையும் வைத்து பத்திரிகையாளர்களை வரவழைத்து படமெடுக்க வைத்து நடந்ததை தெரிவிக்கும் போலீஸ், இந்த சம்பவத்தில் அவ்வாறு செய்யவில்லை. பிடிபட்ட 2 நாட்களுக்கு பின்பு, ஜூலை 16ம் தேதி பைக்கில் வந்தவர்களை விசாரித்ததில் முன்னுக்குப்பின் முரணான தகவலைச் சொல்லியிருக்கிறார்கள்.

 

அவர்கள் வைத்திருந்தது 34,71,320 ரூபாய் ஹவாலா பணம் என்று தெரிய வந்தது. செல்போன் மற்றும் உதிரி பாகங்கள் கடைகளுக்கு சப்ளை செய்து, வாரம் ஒருமுறை கலெக்ட் செய்யும் தொகை என்று அவர்கள் சொன்னதில் உண்மையில்லை. பிடிபட்டவர்களில் ஒருவர் காயல் பட்டினம் அருகேயுள்ள வடக்கு ஆத்தூரின் முகம்மது சேக் முனவரூதின், மற்றொருவர் மேலப்பாளையத்தின் முகைதீன் அசார் என்று மட்டுமே தெரிவித்திருக்கிறார்கள். இதுகுறித்து தகவலறிந்த தென்காசி மாவட்டத்தின் எஸ்.பி.யான சுகுணா சிங், தென்காசி நகரின் இன்ஸ்பெக்டர் ஆடிவேலை அனுப்பி மேல் விசாரணை நடத்த உத்தரவிட்டிருக்கிறார்.

 

இந்த நிலையில் பிடிபட்ட தொகை போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்ட மறுகணமே ஆலங்குளத்தில் தகவல்கள் பறக்க ஆரம்பித்துவிட்டன. போலீஸ் வடிகட்டிச் சொல்கிறது. அவர்கள் பிடிபட்டு ஸ்டேஷன் கொண்டு வரப்பட்டபோதே காவல் நிலையத்தை வட்டமிடும் புரோக்கர்கள் இருவர், வேறு இரண்டு நபர்கள் உள்ளே போய் டீல் பேசியுள்ளனர்.

 

பிடிபட்ட பணத்தில் பெரும்பகுதி மோசடி செய்யப்பட்டுள்ளது என்கிற தகவலும் றெக்கை கட்டுகின்றன. மேலதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும். “அதிகாரிகள் இல்லாத காவல் நிலையத்தில் திருடிவிட்டார்களா” என்றும் கேள்வி எழுப்புகின்றனர். இறுதியாக பிடிபட்டவர்களும் ஹவாலா பணத்துடன் நெல்லை வருமான வரித்துறையினரிடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

 

நாம் இது குறித்து தென்காசி எஸ்.பி.யான சுகுணா சிங்கிடம் பேசியதில், “விசாரணைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்திகள் விரைவில் தெரிய வரும்” என்கிறார். மக்களின் சந்தேகங்களைக் களைய வேண்டிய பொறுப்பிலிருக்கிறது காவல்துறை.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.