Skip to main content

குடும்ப அட்டை இல்லையா ? இணையதளத்தின் மூலம் உடனே விண்ணப்பியுங்கள் !

Published on 13/03/2019 | Edited on 13/03/2019

தமிழக அரசின் பொது விநியோக திட்டத்தின் கீழ் உணவு பொருள் வழங்ககல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பாக "ரேசன் கடைகளில்" அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மலிவு விலையில் பொருட்கள் வழங்கி வருகிறது தமிழக அரசு. இந்த குடும்ப அட்டை அனைத்து அரசு அலுவலகங்களிலும் அடிப்படை சான்றிதழாக கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ration card

குடும்ப அட்டையை இணையதளம் மூலம் விண்ணப்பிப்பது எப்படி?
தமிழக அரசு குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு எளிமையாக இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் வகையில் இணையதளம் ஒன்றை வடிவமைத்துள்ளது. தமிழக அரசின் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் : www.tnpds.gov.in ஆகும். மேலும் இதற்கான மொபைல் செயலியும் (Mobile Application) கூகுல் பிளே ஸ்டோரில் "TNEPDS" என டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த இணையதளத்திற்கு சென்று குடும்ப அட்டையில் உறுப்பினர் பெயர் நீக்கம் மற்றும் பெயர் சேர்த்தல் , புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல் , முகவரி மாற்றம் போன்றவை எளிதாக செய்யலாம். இதற்கு எவ்வித கட்டணமும் தமிழக அரசுக்கு செலுத்த தேவையில்லை.
 

ration card

குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் !
1. குடும்ப தலைவரின் ஆதார் அட்டை.
2. குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டைகள்.
3. முகவரி சான்று  (முகவரி சான்று இல்லையென்றால் கிராம நிர்வாக அலுவலரிடம் சான்றிதழ் பெற்று கொண்டு விண்ணப்பிக்கலாம்)
4.குடும்ப தலைவரின் புகைப்படம்.
5. வயதிற்காக குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தேவை.
6.நிரந்தர தொலைபேசி எண் தேவை.
 

ration card online

இந்த சான்றிதழ் அனைத்தும் "அசல்" சான்றிதழாக இருக்க வேண்டும். குடும்ப அட்டையை விண்ணப்பிக்க "ஆதார் அட்டை அசல்" முக்கியமானது. குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்த பின்பு ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு "Acknowledgement No" வரும். மேலும் குடும்ப அட்டைக்கு விண்ணப்பிதற்கான சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பிறகு www.tnpds.gov.in இணையதளத்திற்கு சென்று குடும்ப விண்ணப்பத்தின் நிலையை அறியலாம். அதே போல் "குடும்ப அட்டை" க்கு தாசில்தார் ஒப்புதல் வழங்கியவுடன் , பிரிண்டிங் நிலைக்கு செல்லும். அதன் பிறகு சமந்தப்பட்ட நியாய விலை கடைக்காரர் குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தவருக்கு தொலைபேசியில் அழைத்து குடும்ப அட்டையை வழங்கிவிடுவார். 

அப்படியும் குடும்ப அட்டை கிடைக்கவில்லை எனில் தமிழக அரசின் இ-சேவை மையத்திற்கு சென்று ரூபாய் 30யை கட்டணமாக செலுத்தி "ஸ்மார்ட் ரேசன் கார்டை" பெற்றுக்கொள்ளலாம். உடன் தொலைபேசியையும் எடுத்த செல்ல வேண்டும். ஏனெனில் குறுந்தகவல் பதிவு செய்யப்பட்ட எண்ணுக்கு வரும்.அதன் மூலம் "LOG IN" செய்து ஸ்மார்ட் ரேசன் கார்டை பெற்றுக்கொள்ளலாம். குடும்ப அட்டை விண்ணப்பிப்பது தொடர்பான சந்தேகங்களுக்கு தமிழக அரசு சார்பாக இலவச தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். தொலைபேசி எண்கள் : 1967 (அல்லது) 1800-425-5901 ஆகும். மேலும் இணையதளத்திலும் இதற்கான "Option" இடம் பெற்றுள்ளது. நியாய விலை கடைகளில் பொருட்கள் வாங்காமல் பொருட்கள் வாங்கியதாக குறுந்தகவல் வந்தால் புகார் செய்ய இந்த இணையதளத்தில் "Option" உள்ளது. குறுந்தகவல் மூலமும் புகார் அளிக்கலாம். இதற்கான தொலைபேசி எண் : 9980904040.

எனவே இந்த இணையதளத்தை பயன்படுத்தி குடும்ப அட்டை இல்லாத்தோர்கள் புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். முந்தைய ஆண்டுகளில் தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்கும் நிலை இருந்தது. ஆனால் தற்போது நியாய விலை கடையில் பொருட்கள் உள்ளதா? என்னென்ன பொருட்கள் இருப்பு உள்ளது? தமிழக அரசு கிடங்கில் மொத்த இருப்பு பொருட்கள் உள்ளது என்பதை எளிதாக இந்த இணையதளம் மூலம் அறியலாம். இதற்கான மொபைல் செயலியும் (Mobile Application) உள்ளது.  குடும்ப அட்டை தொடர்பான தகவல்களை பெற பதிவு செய்யப்பட்ட "தொலைபேசி எண்" மிக முக்கியமானது. மேலும் "LOGIN" செய்யும் போது இந்த தொலைபேசி எண்ணை பதிவு செய்து , பிறகு தொலைபேசி எண்ணுக்கு வரும் "OTP"யை பதிவிட்டால் மட்டுமே தங்கள் குடும்ப அட்டை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பெறலாம் (அல்லது) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த இணையதளம் கிராம மக்களுக்கு மிக உதவியாக இருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.


பி. சந்தோஷ் , சேலம்.

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.