Skip to main content

குடும்ப அட்டை இல்லையா ? இணையதளத்தின் மூலம் உடனே விண்ணப்பியுங்கள் !

Published on 13/03/2019 | Edited on 13/03/2019

தமிழக அரசின் பொது விநியோக திட்டத்தின் கீழ் உணவு பொருள் வழங்ககல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பாக "ரேசன் கடைகளில்" அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மலிவு விலையில் பொருட்கள் வழங்கி வருகிறது தமிழக அரசு. இந்த குடும்ப அட்டை அனைத்து அரசு அலுவலகங்களிலும் அடிப்படை சான்றிதழாக கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ration card

குடும்ப அட்டையை இணையதளம் மூலம் விண்ணப்பிப்பது எப்படி?
தமிழக அரசு குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு எளிமையாக இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் வகையில் இணையதளம் ஒன்றை வடிவமைத்துள்ளது. தமிழக அரசின் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் : www.tnpds.gov.in ஆகும். மேலும் இதற்கான மொபைல் செயலியும் (Mobile Application) கூகுல் பிளே ஸ்டோரில் "TNEPDS" என டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த இணையதளத்திற்கு சென்று குடும்ப அட்டையில் உறுப்பினர் பெயர் நீக்கம் மற்றும் பெயர் சேர்த்தல் , புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல் , முகவரி மாற்றம் போன்றவை எளிதாக செய்யலாம். இதற்கு எவ்வித கட்டணமும் தமிழக அரசுக்கு செலுத்த தேவையில்லை.
 

ration card

குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் !
1. குடும்ப தலைவரின் ஆதார் அட்டை.
2. குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டைகள்.
3. முகவரி சான்று  (முகவரி சான்று இல்லையென்றால் கிராம நிர்வாக அலுவலரிடம் சான்றிதழ் பெற்று கொண்டு விண்ணப்பிக்கலாம்)
4.குடும்ப தலைவரின் புகைப்படம்.
5. வயதிற்காக குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தேவை.
6.நிரந்தர தொலைபேசி எண் தேவை.
 

ration card online

இந்த சான்றிதழ் அனைத்தும் "அசல்" சான்றிதழாக இருக்க வேண்டும். குடும்ப அட்டையை விண்ணப்பிக்க "ஆதார் அட்டை அசல்" முக்கியமானது. குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்த பின்பு ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு "Acknowledgement No" வரும். மேலும் குடும்ப அட்டைக்கு விண்ணப்பிதற்கான சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பிறகு www.tnpds.gov.in இணையதளத்திற்கு சென்று குடும்ப விண்ணப்பத்தின் நிலையை அறியலாம். அதே போல் "குடும்ப அட்டை" க்கு தாசில்தார் ஒப்புதல் வழங்கியவுடன் , பிரிண்டிங் நிலைக்கு செல்லும். அதன் பிறகு சமந்தப்பட்ட நியாய விலை கடைக்காரர் குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தவருக்கு தொலைபேசியில் அழைத்து குடும்ப அட்டையை வழங்கிவிடுவார். 

அப்படியும் குடும்ப அட்டை கிடைக்கவில்லை எனில் தமிழக அரசின் இ-சேவை மையத்திற்கு சென்று ரூபாய் 30யை கட்டணமாக செலுத்தி "ஸ்மார்ட் ரேசன் கார்டை" பெற்றுக்கொள்ளலாம். உடன் தொலைபேசியையும் எடுத்த செல்ல வேண்டும். ஏனெனில் குறுந்தகவல் பதிவு செய்யப்பட்ட எண்ணுக்கு வரும்.அதன் மூலம் "LOG IN" செய்து ஸ்மார்ட் ரேசன் கார்டை பெற்றுக்கொள்ளலாம். குடும்ப அட்டை விண்ணப்பிப்பது தொடர்பான சந்தேகங்களுக்கு தமிழக அரசு சார்பாக இலவச தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். தொலைபேசி எண்கள் : 1967 (அல்லது) 1800-425-5901 ஆகும். மேலும் இணையதளத்திலும் இதற்கான "Option" இடம் பெற்றுள்ளது. நியாய விலை கடைகளில் பொருட்கள் வாங்காமல் பொருட்கள் வாங்கியதாக குறுந்தகவல் வந்தால் புகார் செய்ய இந்த இணையதளத்தில் "Option" உள்ளது. குறுந்தகவல் மூலமும் புகார் அளிக்கலாம். இதற்கான தொலைபேசி எண் : 9980904040.

எனவே இந்த இணையதளத்தை பயன்படுத்தி குடும்ப அட்டை இல்லாத்தோர்கள் புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். முந்தைய ஆண்டுகளில் தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்கும் நிலை இருந்தது. ஆனால் தற்போது நியாய விலை கடையில் பொருட்கள் உள்ளதா? என்னென்ன பொருட்கள் இருப்பு உள்ளது? தமிழக அரசு கிடங்கில் மொத்த இருப்பு பொருட்கள் உள்ளது என்பதை எளிதாக இந்த இணையதளம் மூலம் அறியலாம். இதற்கான மொபைல் செயலியும் (Mobile Application) உள்ளது.  குடும்ப அட்டை தொடர்பான தகவல்களை பெற பதிவு செய்யப்பட்ட "தொலைபேசி எண்" மிக முக்கியமானது. மேலும் "LOGIN" செய்யும் போது இந்த தொலைபேசி எண்ணை பதிவு செய்து , பிறகு தொலைபேசி எண்ணுக்கு வரும் "OTP"யை பதிவிட்டால் மட்டுமே தங்கள் குடும்ப அட்டை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பெறலாம் (அல்லது) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த இணையதளம் கிராம மக்களுக்கு மிக உதவியாக இருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.


பி. சந்தோஷ் , சேலம்.

சார்ந்த செய்திகள்

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.