Skip to main content

''இதுவரை இரண்டு முறை தடைப்பட்டு போய்விட்டது''-ஓபிஎஸ் பேட்டி

Published on 30/10/2022 | Edited on 30/10/2022

 

"Has been blocked twice" - OPS interview

 

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115-வது ஜெயந்தி மற்றும் 60-வது குருபூஜை விழாவையொட்டி, இன்று (30/10/2022) காலை 10.00 மணியளவில் இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் பல்வேறு தரப்பினர், அரசியல் கட்சியினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

 

இந்நிலையில் தேவரின் சிலைக்கு முன்னாள் முதலமைச்சரும், தமிழக எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓபிஎஸ் பத்தரை கிலோ எடை கொண்ட வெள்ளிக்கவசத்தை தேவர் நினைவிடத்தின் பொறுப்பாளரான காந்தி மீனாள் நடராஜனிடம் வழங்கினார்.

 

அதன் பிறகு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ஓபிஎஸ், 'எதன் சார்பாக இந்த வெள்ளி கவசம் வழங்கப்பட்டது என்ற' கேள்விக்கு, 'அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் நான்தான். அந்த அடிப்படையில் அதிமுக சார்பில் வெள்ளிக் கவசத்தை வழங்கி இருக்கிறேன். அதிமுக சார்பில் வெள்ளிக்கவசத்தை அறக்கட்டளையில் ஒப்படைத்து விட்டோம். ஜெயலலிதா பசும்பொன் தேவருக்கு 13 கிலோ தங்கக் கவசத்தை குருபூஜை நடக்கின்ற நன்னாளில் சாத்தப்பட வேண்டும் என்று அப்பொழுது பொருளாளராக இருந்த என்னையும், இத்திருக்கோவிலின் அறங்காவலராக இருக்கக்கூடிய பெரியம்மா காந்தி மீனா அவர்களையும் நியமித்திருந்தார்கள்.

 

அதனடிப்படையில் இதுவரை தங்கக் கவசத்தை இங்கு கொண்டுவந்து  தேவர் சிலைக்கு சாற்றிவிட்டு குருபூஜை நிறைவடைந்த உடன் எடுத்துச் சென்று வங்கியில் வைக்கக்கூடிய பழக்கம் இருந்தது. 2017 ஆம் ஆண்டும், இந்த ஆண்டும் எதிர்பாராத விதமாக அந்த நிகழ்வு தடைப்படுகிற சூழல் ஏற்பட்டது. இதனால் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருக்கின்ற நான், 'கலெக்டரிடம் இந்த தங்கக் கவசத்தை கொடுத்து குருபூஜைக்கு எந்த ஒரு இடையூறும் வராமல் எப்பொழுதும் போல் தங்கக் கவசம் தேவர் சிலைக்கு சாற்றப்பட வேண்டும்' என்று ஏற்கனவே 25 தினங்களுக்கு முன்பே கடிதம் கொடுத்து விட்டோம்.

 

அந்த கடிதத்தின் அடிப்படையில் இது நிகழ்ந்துள்ளது. ஆனால் சீனிவாசன் தற்காலிக பொருளாளர் என்று சொல்லிக்கொண்டு அவர்தான் உயர் நீதிமன்றத்திற்கு வழக்கு எடுத்துச் சென்றார். அந்த வழக்கை நாங்களும் எதிர்கொள்கின்ற சூழல் ஏற்பட்டது. நாங்கள் நீதிமன்றத்தில் சொன்னோம் 'எந்த தாமதமும் இல்லாமல் தங்கக் கவசம் செல்ல வேண்டும் அதுதான் முறையான செயலாக இருக்கும் என்பதை நாங்கள் உணர்ந்திருக்கின்றோம். ஆகவே இங்கே மாவட்ட நிர்வாகத்திடம் தங்கக் கவசத்தை தந்து அவர்களே எடுத்துக் கொண்டு அறக்கட்டளையினுடைய தலைவராக பொறுப்பேற்று இருக்கக்கூடிய காந்தி மீனாவிடம் தந்து தங்கக் கவசத்தை குருபூஜையில் வைத்து சிறப்பிக்க வேண்டும். அதேபோன்று மீண்டும் வங்கியில் வைப்பதற்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்று கடிதம் கொடுத்து விட்டோம்' என்று.

 

அவர்கள் எங்களிடம்தான் தர வேண்டும் என்று வழக்கு போட்டார்கள். ஆனால் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. எங்களுடைய கோரிக்கையில் இருக்கின்ற நியாயத்தை உணர்ந்து அந்த தங்கக் கவசம் அறக்கட்டளையின் தலைவரிடமும், மாவட்ட நிர்வாகத்திமும் தர வேண்டும் என்று நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. அதேபோல் அதிமுக சார்பாக இன்று வெள்ளிக்கவசம் தந்திருக்கிறோம்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.