பரபரப்பாசப் பேசட்ட ராக்கெட்ராஜாவைத் தலைவராகக் கொண்ட பனங்காட்டுப் படை கட்சியின் சார்பில் நாங்குநேரி இடைத்தேர்லின் வேட்பாளராக அதன் ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் அறிவிக்கப்பட்டார்.
இன்று மதியம் ஒரு மணிவாக்கில் சுமார் 50 பைக்குகள், 20 கார்களில் பரபரப்பாக தனது ஆதரவாளர்கள் திரண்டு வர நாங்குநேரி தேர்தல் அதிகாரியான மாவட்ட வட்ட வழங்கல் அதிகாரி நடேசனிடன் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். அப்போது உடன் வந்த அவரது ஐந்து வழக்கறிஞர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். ராக்கெட்ராஜா வரவில்லையாம்.