பொறுத்துக்கொள் சாமி... சுர்ஜித் குறித்து ஹர்பஜன் சிங்...

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித், நேற்று முன்தினம் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான்.

harbajan about surjith rescue mission

20 அடி ஆழத்தில் சிக்கியிருந்த குழந்தை, மீட்பு பணிகளின் போதே மேலும் உள்நோக்கி சென்று தற்போது 88 அடி ஆழத்தில் சிக்கியுள்ளது. சுமார் 2 நாட்களாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சுர்ஜித் குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "நிலவில் நீர்,செவ்வாயில் குடியிருப்பு,எதற்காக இத்துணைக் கண்டுபிடிப்புகள்?நூறு அடியில் உயிரொன்று ஊசலாடுகையில் விஞ்ஞானமும் நாமும் எதற்கு.#சுர்ஜித் பூமி தாய் வயிற்றில் கருவாகி இருக்கிறாய்.பிரசவ வலி அந்த தாய்க்கு பதில் உனக்கு பொறுத்துக்கொள் சாமி.விழித்துக்கொள் தேசமே" என பதிவிட்டுள்ளார்.

Harbajan Singh surjith
இதையும் படியுங்கள்
Subscribe