/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/hanuman-jeyanthi.jpg)
நேற்று (02.01.2022) தமிழகம் முழுவதும் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்பட்டதையொட்டி பல்வேறு கோயில்களில் ஆஞ்சநேயர் சிலைக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக திருச்சி கல்லுகுழி ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயருக்கு மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1 லட்சத்து 8 வடைகளை கொண்ட வடை மாலைகள் சாற்றப்பட்டு அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக ஆஞ்சநேயருக்கு சாற்றப்பட்ட வடைகள் வழங்கப்பட்டது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)