'கைத்தறி கூட்டுறவு சங்கங்கள் மூடு விழா'-புலம்பும் நெசவாளர்கள்

'Handloom Co-operative Societies Closing Ceremony'-weavers lament

திண்டுக்கல் மாவட்டத்தில் சின்னாளபட்டியில் எம்.எச்.41 அண்ணா நெசவாளர் கூட்டுறவு சங்கம், எம்.எச்.34 சிலம்புச்செல்வர் நெசவாளர் கூட்டுறவு சங்கம், எம்.எச்.35 நம்நாடு நெசவாளர் கூட்டுறவு சங்கம், எம்.எச்.37 அஞ்சுகம் நெசவாளர் கூட்டுறவு சங்கம், எம்.எச்.43 காந்திஜி நெசவாளர் கூட்டுறவு சங்கம், எம்.எச்.147 கமலாநேரு நெசவாளர் கூட்டுறவு சங்கம், எம்.எச்.169 அமரர் சஞ்சய் காந்தி நெசவாளர் கூட்டுறவு சங்கம், எம்.எச்.87 சித்தையன்கோட்டை நெசவாளர் கூட்டுறவு சங்கம் உட்பட 8 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.

இதில் சித்தையன்கோட்டை கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் சித்தையன்கோட்டையில் செயல்பட்டு வந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சின்னாளபட்டி மேட்டுப்பட்டி தேவாங்கர் பெண்கள் பள்ளி முன்பு கொண்டு வரப்பட்டது. பெரும் கடனில் மூழ்கிய நிலையில் கைத்தறி சங்கம் செயல்பட்டு வந்தது. திடீரென அதன் மேலாளர்; சின்னத்துரை இறந்து போகவே கடனில் இருக்கும் கைத்தறி நெசவாளர் சங்கத்திற்கு முறையாக யாரும் பொறுப்பேற்க வராததால் சுழற்சி முறையில் நிர்வாக இயக்குநர்கள் பதவி வகித்து வருகின்றனர்.

'Handloom Co-operative Societies Closing Ceremony'-weavers lament

இந்நிலையில் தனியார் ஆதிக்கத்தில் செயல்பட்டு வரும் கைத்தறி நெசவாளர் சங்கங்களை மேம்படுத்த மினி ஜவுளிப் பூங்கா திறக்கப்பட்டது. அதிலும் பத்து தறிகள் மட்டும் பூட்டப்பட்டு அதுவும் தனியார் வசமானது. தற்போது தனியார் கோரா பட்டுச்சேலை உற்பத்தியாளர்களின் பிடியில் சின்னாளபட்டியில் உள்ள கைத்தறி நெசவாளர்கள் சங்கங்கள் செயல்பட்டு வருகிறது. இதனால் கைத்தறி நெசவாளர்களுக்கு முறையான தீபாவளி போனசோ, பொங்கல் அட்வான்சோ கொடுக்க முடியாத நிலை உள்ளது. இதில் இரண்டு கூட்டுறவு சங்கங்களில் முறையான தணிக்கை நடைபெறாததால் அதில் உறுப்பினராக நெசவாளர்களுக்கு எந்த ஒரு சலுகையும் கிடைக்காத நிலை உள்ளது.

நெசவாளர்கள் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் கைத்தறி துறை அமைச்சர் காந்திநாதன் முன்னிலையில் கூட்டுறவு சங்கங்களில் முறையான கூலி கொடுப்பதில்லை என புகார் செய்தும் இன்று வரை அதே நிலைமை தான் இன்று வரை நீடித்து வருகிறது. கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் நெசவு நெய்யப்படும் கோராப்பட்டு சேலைகளின் தரம் முறையாக இருக்கும். ஆனால் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் தனியாரிடமிருந்து வாங்கும் கோராப்பட்டு சேலைகளையும், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்திற்கு அனுப்புவதால் அவர்கள் அங்கு தரத்தை சோதனையிட்ட போது எடை குறைவாகவும், உயரம் குறைவாகவும் சேலைகள் இருந்ததால் தற்போது முறையாக கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் சின்னாளபட்டியில் உள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் கோராப்பட்டு சேலைகளை கொள்முதல் செய்வது கிடையாது. இதனாலும் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் திணறி வருகின்றன.

'Handloom Co-operative Societies Closing Ceremony'-weavers lament

திண்டுக்கல் மாவட்ட கைத்தறி துறையில் சின்னாளபட்டியில் உள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மர்மதேசம் போல் நடைபெறுவதால் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் மீதோ, மேலாளர் மீதோ எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலை உள்ளது. கைத்தறி நெசவாளர்கள் நலன் கருதி கூட்டுறவுத்துறையில் பட்டயப் படிப்பு படித்த நபர்களை கூட்டுறவு சங்கங்களுக்கு மேலாளர் மற்றும் கணக்காளர் பதவிகளில் அமர்த்தாவிட்டால் கூட்டுறவு சங்கங்கள் இன்னும் படுபாதாளத்திற்கு சென்று விரைவில் மூடுவிழா கண்டுவிடும் என்று கைத்தறி நெசவாளர்கள் புலம்புகின்றனர்.

இதுகுறித்து சின்னாளபட்டி பா.ம.க. நகர செயலாளர் மருதமுத்து கூறுகையில், ''அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் கைத்தறிதுறை அமைச்சர் காந்திநாதன் முன்னிலையில் கூட்டுறவு சங்கங்களில் நெசவு செய்யும் நெசவாளர்களுக்கு கூலியை குறைவாக கொடுக்கிறார்கள் என பகிரங்கமாக நெசவாளர்கள் குற்றம் சாட்டியும் இதுநாள் வரை அவர்களுக்கு முறையான கூலி வழங்கவில்லை. தீபாவளி போனசோ, பொங்கல் முன்பணமோ கொடுக்கவில்லை. இது தவிர இரண்டு கூட்டுறவு சங்கங்களில் தணிக்கை நடைபெறாததால் அந்த கூட்டுறவு சங்கங்களில் நெசவு நெய்யும் நெசவாளர்களுக்கும் எந்த ஒரு நலத்திட்டங்களும் முறையாக வழங்கவில்லை கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் நெசவாளர்களுக்கு முறையான கூலி உயர்வோ, நலத்திட்டமோ வழங்கவில்லை என்றால் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக கூட்டுறவு சங்கங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்'' என்றார்.

Handlooms
இதையும் படியுங்கள்
Subscribe