Skip to main content

 ’’பாலியல் வன்முறையில் ஈடுபட்டவனின் கை, கால்களை வெட்டும் சட்டம் வேண்டும்’’ - மதுரை ஆதீனம் 

Published on 21/04/2018 | Edited on 21/04/2018

 

madurai atheenam

 

மதுரை ஆதீனம் புதுக்கோட்டையில் நடந்த ஒரு பணி நிறைவு பாராட்டு விழாவில் கலந்து கொண்டார். தொடர்ந்து பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

 

அப்போது அவர்,  ‘’காவிரி நீரை பெற வேண்டும் என்று ஆளும் கட்சி ஒரு பக்கமும் எதிர்கட்சிகள் மு.க. ஸ்டாலின் தலைமையிலும் போராடி வருகிறார்கள். மாணவர்கள் இளைஞர்கள் எல்லாரும் போராடினாலும் அடுத்த தேர்தலில் பாஜகவோ அல்லது காங்கிரஸ் கட்சியோ எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும்  காவிரி தண்ணீர்
 தமிழகத்துக்கு வராது. காரணம் கர்நாடக மக்கள் விடமாட்டார்கள். அதனால் மக்களுக்குள் புரிந்து கொள்ளும் விதமாக பேசி அவர்களின் மனதை மாற்ற வேண்டும். மக்கள் சமாதானமானால் மட்டுமே காவிரி தண்ணீர் தமிழகம் வரும். காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் ராணுவத்தை வைத்து தண்ணீரை திறந்து வரலாம். அதனால தான் மேலாண்மை வாரியம் அமைக்க  கூடாது என்கிறார்கள். காவிரிக்காக கர்நாட மக்களிடம் பேச்சு நடத்த அரசு அழைத்தா்ல் நாங்கள் செல்ல தயாராக உள்ளோம்’’என்றார்.


 

   எச். ராஜா, எஸ்.வி. சேகர் ஆகியோர் பெண்களுக்கு எதிராக பேசிவருகிறார்களே..
 என்ற கேள்விக்கு,  ’’எங்களைப் பொருத்தவரை பாலியல் வன்கொடுமைக்கு எதிராக அரபு நாடுகளைப் போன்ற கடுமையான சட்டங்களை கொண்டுவர வேண்டும். பாலியல் வன்முறையில் ஈடுபட்டவனை கையை காலை வெட்டும் சட்டம் வேண்டும். அரசியல்வாதிகள் கண்ணியமான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும்’’ என்றார்.

 

பேராசிரியர் மாணவிகளை தவறான வழிக்கு அழைத்திருப்பது பற்றிய கேள்விக்கு,    ’’இது ஒன்று தான் வெளியே தெரிந்திருக்கிறது. ஆனால் பல சம்பவங்கள் தெரியாமலே உள்ளது. மாணவிகள் பாதிக்கப்படுவதால் இந்த சந்தர்ப்பத்தில் இந்தியாவில் பாலியல் வன்முறைக்கு எதிராக கடுமையான சட்டம் கொண்டு வர வாய்ப்பு உருவாகி உள்ளது’’என்று தெரிவித்தார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

சமையலரின் மகளை அழைக்கும் அமெரிக்க பல்கலை. நெகிழ்ந்த தலைமை நீதிபதி

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
The chef's daughter who won the Chief Justice's praise for studying law abroad

டெல்லி உச்சநீதிமன்ற வளாகத்தில் உள்ள கேண்டீனில் சமையல் செய்யும் ஊழியர் அஜய்குமார் சமல். இவரின் மகள் பிரக்யா (25). சட்டப்படிப்பு படித்த பிரக்யாவுக்கு அமெரிக்காவில் உள்ள இரண்டு முன்னணி பல்கலைக்கழகங்களில் சட்ட மேற்படிப்பு படிக்க உதவித்தொகை கிடைத்துள்ளது. 

அமெரிக்காவில் உள்ள பிரபலமான கலிபோர்னியா பல்கலைக்கழகம் மற்றும் மிச்சிகன் பல்கலைக்கழகம் ஆகிய இரண்டு பல்கலைக்கழகங்களும் அவருக்கு கல்வி உதவித்தொகை வழங்க முன்வந்திருக்கிறது. அதனையொட்டி, சட்டமேற்படிப்பு படிப்பதற்காக அமெரிக்கா செல்லும் பிரக்யாவை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திசூட் உள்ளிட்ட அனைத்து நீதிபதிகளும் நேரில் வரவழைத்து பாராட்டினர். மேலும், பிரக்யாவுக்கும், அவரது குடும்பத்துக்கும், தலைமை நீதிபதி சந்திரசூட் சால்வை அணிவித்து கவுரவித்தார். 

இதனையடுத்து, அவர் கையெழுத்திட்ட இந்திய அரசியலமைப்பு சட்டம் தொடர்பான 3 புத்தகங்களை பிரக்யாவுக்கு வழங்கினார். இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய தலைமை நீதிபதி சந்திரசூட், “பிரக்யா தனது சொந்த உழைப்பால் இதனை சாதித்துள்ளார் என்பதை நாங்கள் அறிவோம். இருந்தாலும், அவருக்கு தேவைப்படும் அனைத்தையும் பெறுவதை நாங்கள் உறுதி செய்வோம். அவர் படிப்பை முடித்து மீண்டும் நாட்டுக்கு சேவை செய்ய வர வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். அவர் எதைச் செய்தாலும், சிறந்து விளங்குவார். மேலும், 1.4 பில்லியன் மக்களின் கனவுகளை மிக எளிதாகத் தன் தோளில் சுமந்து செல்வார்” என்று கூறினார்.

இதனை தொடர்ந்து பேசிய பிரக்யா, “எனது தந்தைக்கு  மகளாக இருப்பதற்கு நான் மிகவும் பாக்கியம் என்று நினைக்கிறேன். எனது பள்ளி நாட்களில் இருந்தே அவர் எனக்கு உதவியுள்ளார். மேலும் எனக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகளை அவர் எப்போதும் பெறுவதை உறுதி செய்தார். நீதிமன்ற விசாரணைகளின் நேரடி ஒளிபரப்பு மூலம், தலைமை நீதிபதி சந்திரசூட் பேசுவதை அனைவரும் பார்க்கலாம். அவர் இளம் வழக்கறிஞர்களை ஊக்குவிப்பார். அவருடைய வார்த்தைகள் விலை மதிப்பற்றவை. அவர் தான் எனக்கு ரோல் மாடல்” என்று தெரிவித்தார். 

Next Story

புதிய குற்றவியல் சட்டங்கள் எப்போது அமல்? - மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Notification issued by Central Govt for When will the new criminal laws come into force?

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம் ஆகிய 3 குற்றவியல் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இந்த சட்டங்கள்தான் இப்போது வரை அமலில் இருந்தன. இதற்கிடையே, இவற்றுக்கு மாற்றாக 3 புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு உருவாக்கியது. அதன்படி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் 3 குற்றவியல் மசோதாக்கள் இந்தியில் மாற்றப்பட்டு தாக்கல் செய்யப்பட்டன.

அதன்படி, இந்திய தண்டனைச் சட்டம் என்பதை பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் எனவும், குற்றவியல் நடைமுறை சட்டம் என்பதை பாரதிய நாகரிக் சுரக்‌ஷ சன்ஹிதா எனவும், இந்திய சாட்சியங்கள் சட்டம் என்பதை பாரதிய சாக்சியா எனவும் பெயர் மாற்றம் செய்ய பரிந்துரைத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் 3 மசோதாக்களையும் தாக்கல் செய்தார். அதன் பின்னர், அவை நாடாளுமன்ற ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. நாடாளுமன்ற நிலைக்குழு தனது பரிந்துரைகளை அறிக்கையாக சமர்ப்பித்தது. அந்த பரிந்துரைகள் சேர்க்கப்பட்டு புதிய குற்றவியல் மசோதாக்கள் உருவாக்கப்பட்டன. 

இதையடுத்து, நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைகளுடன் கூடிய புதிய குற்றவியல் மசோதாக்களை கடந்த ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதி மத்திய உள்துறை அமித்ஷா தாக்கல் செய்தார். மக்களவையில் 3 புதிய குற்றவியல் மசோதாக்களும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து இந்த 3 குற்றவியல் மசோதாக்களும் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. இந்த 3 புதிய குற்றவியல் மசோதாக்களும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தார்.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய குற்றவியல் சட்டங்கள் வரும் ஜூலை மாதம் 1 ஆம் தேதி அமலுக்கு வரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், அடுத்த 100 ஆண்டுகளுக்கு பொருந்தும் வகையில், தொழில்நுட்ப முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு புதிய குற்ற சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.