Skip to main content

அரையாண்டுத் தேர்வு தேதி அறிவிப்பு

Published on 20/11/2023 | Edited on 20/11/2023

 

Half Yearly Exam Date Notification for School Students
கோப்புப்படம்

 

6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் தமிழகம் முழுவதும் பயிலும் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு ஒரே மாதிரியான தேர்வாக நடைபெற உள்ளது.

 

11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு டிசம்பர் மாதம் 7 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 22 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 21 ஆம் தேதி வரை அரையாண்டுத் தேர்வு நடைபெறுகிறது என பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னையில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

Chance of rain with thunder and lightning in Chennai

 

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

 

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாகப்பட்டினம் மற்றும் ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று (01.12.2023) காலை 10 மணி வரை  மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரையில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

‘மிக கனமழைக்கு வாய்ப்பு’ - வானிலை ஆய்வு மையம் முக்கிய தகவல்

Published on 30/11/2023 | Edited on 30/11/2023

 

'Chance of very heavy rain' - Meteorological Department key information

 

வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

 

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலசந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தொடர்ந்து நிலவுகிறது. மேலும் தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தொடர்ந்து நிலவி வருகிறது. இது மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து அடுத்து வரும் 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இது தொடர்ந்து மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 3 ஆம் தேதி புயலாக வலுப்பெறக்கூடும். பின்னர் இது வட மேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 4 ஆம் தேதி அதிகாலை வட தமிழகம் தெற்கு ஆந்திரா கடல் பகுதியில் புயலாக நிலவக்கூடும்.

 

மேலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (30.11.2023) மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் இன்று கனமழை பெய்யக்கூடும். டிசம்பர் 2 ஆம் தேதி கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது” எனத் தெரிவித்தார். 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்