Skip to main content

சலூன் கடையில் காவலர் அடாவடி; அதிரடி நடவடிக்கையில் எஸ்.பி

Published on 20/02/2023 | Edited on 20/02/2023

 

nn

 

தன் மகனுக்கு சரியாக முடி வெட்டாததால் அடாவடியாக அத்துமீறி மற்றொருவரின் சலூன் கடைக்கு பூட்டு போட்டு பொது இடத்தில் அதகளம் செய்த போலீஸ்காரர் மீது அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளார் மாவட்ட எஸ்.பி. சரவணன்.

 

நெல்லை மாவட்டத்தில் திசையன்விளை காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வருபவர் நேவிஸ் பிரிட்டோ. இவரின் மகன் நகரிலுள்ள சலூன் கடைக்கு முடி வெட்டச் சென்றுள்ளார். வீட்டுக்கு வந்த மகனைப் பார்த்ததும், அவருக்கு சரியாக முடித்திருத்தம் செய்யவில்லை எனக் கூறி, காவலர் நேவிஸ் பிரிட்டோவும் அவரது மனைவியும் மகனிடம் சலூன் கடை பற்றி சரிவர விசாரிக்காமல் மாறுதலாக தனியார் பள்ளியின் எதிரே உள்ள மற்றொரு சலூன் கடைக்குச் சென்றுள்ளனர். அந்தக் கடையின் உரிமையாளர் இல்லாததால் அவரின் நம்பரில் தொடர்பு கொண்ட காவலர்  அவரை திட்டியதுடன் கடைக்கு வரவழைத்துள்ளார்.

 

அத்துடன் தன்னிடமிருந்த பெரிய பூட்டைக் கொண்டு கடையைப் பூட்ட முயன்றுள்ளார். அதைக்கண்டு பதறிய பக்கத்து கடைக்காரர், “அவர் சாப்பிடச் சென்றுள்ளார். இப்போ வந்துடுவார். கடையைப் பூட்டாதீங்க” என்றவரிடம் அநாகரீகமாக பேசிய காவலர் கடையைப் பூட்டியுள்ளார். சில நொடிகளில் கடையின் உரிமையாளரான யுவசிவராமன் வந்தவுடன் போலீஸ்காரர் நேவிஸ் பிரிட்டோ அங்கிருந்து சென்றிருக்கிறார். அது சமயம் யுவசிவராமன் போலீஸ்காரர் மகனிடம், “நான் உனக்கு முடி வெட்டினேனா” என்று கேட்டதற்கு, “இல்லை” என்று பதிலளித்துள்ளான். அதன் பிறகே போலீஸ்காரர் தவறான கடைக்கு வந்து பூட்டிச் சென்றது தெரியவந்தது.

 

நடு பஜாரில் கடை ஒன்றை காவலர் அடாவடியாகப் பூட்டிய சம்பவம் நகர வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சியையும் பதைபதைப்பையும் ஏற்படுத்த, காவலர் நடந்த கொண்டது, அவரின் அத்துமீறல் பேச்சுக்கள் தொடர்பான வீடியோ வைரலாக, இதனையறிந்த மாவட்ட எஸ்.பி.யான சரவணன் அதிரடி நடவடிக்கையாக போலீஸ்காரர் நேவிஸ் பிரிட்டோவை ஆயுதப்படைக்கு மாற்றி விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

கட்டுப்பாட்டை இழந்த லாரி; தப்பிக்குதிக்க முயன்ற ஓட்டுநர் உயிரிழப்பு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
bb

கட்டுப்பாட்டை இழந்த லாரியில் இருந்து குதித்து உயிர் தப்பிக்க முயன்ற லாரி ஓட்டுநர் லாரியின் டயரிலேயே சிக்கி உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடியில் நிகழ்ந்துள்ளது.

நெல்லையில் இருந்து சிவகாசி நோக்கி பழைய பேப்பர்களை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி இனாம்மணியாச்சி பாலம் அருகே சென்று கொண்டிருந்தது. லாரியை தூத்துக்குடி சேர்ந்த இலந்தைகுளம் பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (60 வயது) என்பவர் லாரியை ஓட்டிக் கொண்டிருந்தார். இரவு வேளையில் திடீரென சாலையின் தடுப்பு மீது மோதிய லாரி கட்டுப்பாட்டை இழந்து  தாறுமாறாக ஓடியது. லாரி கட்டுப்பாட்டை இழந்தவுடன் எகிறி குதித்து தப்பித்துக் கொள்ளலாம் என வெளியே குதித்த ஓட்டுநர் லாரியினுடைய சக்கரத்திலேயே விழுந்து உயிரிழந்தார். உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஓட்டுநர் ராமகிருஷ்ணன் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.