Skip to main content

நாம் அனைவரும் முத்துராமலிங்கத் தேவரைப்போல் மாறவேண்டும்... - எச்.ராஜா

Published on 20/09/2018 | Edited on 20/09/2018
h raja

 

 

தற்போது எச். ராஜா பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வலம் வருகிறது. அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பது... 

இப்போது தமிழகத்தில் இந்துக்களின் எழுச்சி வரத்துவங்கியிருக்கிறது. இந்து உணர்வாளர்கள் வீதிக்கு வரத் தொடங்கியுள்ளார்கள். இந்த நிலை ஏன் நமக்கு என நாம் சிந்தித்து பார்ப்போமேயானால், பெரியவர் முத்துராமலிங்கத் தேவர் தேசியத்தையும், தெய்வீகத்தையும் தன்னிறு கண்களாகக் கொண்டு, நாத்திகவாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். மதுரையில் தேவர் வாழ்ந்த வரையில் கருப்புசட்டைப் போட எவருக்கும் துணிச்சலில்லை. ஆகவே அந்தமாதிரியான சூழ்நிலை இப்போது வரவேண்டுமென சொன்னால் நாம் ஒவ்வொருவரும் தேவர் பெருமானாக மாறவேண்டும். அப்போதுதான் தமிழகத்திலுள்ள இந்துக்கள் மானத்தோடு வாழமுடியும். நமது மத அடையாளங்களை யாரும் இழிவுபடுத்த எண்ணமாட்டார்கள். இன்று தேவருடைய தேவையை உணரவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்